பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகளும் பயணக் கட்டுப்பாடுகளும் நீடிப்பதால் வேலையின்மையும் ஆட்குறைப்பும் இவ்வாண்டின் எஞ்சிய பகுதியில் இன்னும் மோசமடையக் கூடும் என தேசிய தொழிற் சங்க காங்கிரஸ் (என்டியுசி) உதவி தலைமைச் செயலாளர் பேட்ரிக் டே தமது ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.
மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறுகையில், உள்ளூர், வெளிநாட்டு ஊழியர்கள் என்னும் ஊழியரணியின் கலவையை இது பிரதிபலிப்பதாகவும் துல்லியமான விவ ரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித் தார். வேலைவாய்ப்பு என்பது நிறுவனங்களுக்கு இடையிலான போக்கைப் பொறுத்தது. சில தங்களது பணிகளை மறுபடியும் தொடங்கினாலும் புதிதாக ஆட்களை நியமிப்பதற்குப் பதில், இருக்கும் ஊழியர்களிடம் அதிகப் பொறுப்புகளை அவை வழங்கக் கூடும்," என்றார் அவர்.

