குப்பைத் தொட்டியில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்பில் பெண் மீது குற்றச்சாட்டு

புதிதாக பிறந்த குழந்தையைக் கைவிட்டதாக 29 வயது இந்தோனீசிய மாது மீது இன்று (ஜூலை 30) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அப்பர் பாய லேபார் சாலை அருகே தாய் கெங் கார்டன்ஸ் எனும் தனியார் குடியிருப்புப் பேட்டையில் உள்ள பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொட்டியில் கடந்த திங்கட்கிழமை அந்தக் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்ட அந்த மாது, அக்குழந்தையின் தாயார் எனக் கூறப்படுகிறது. திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் அவர் அக்குற்றத்தைப் புரிந்தார் எனக் கூறப்படுகிறது.

அந்த மாது நேற்று கைது செய்யப்பட்டார். அக்குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாக்க நீதிமன்ற உத்தரவின் காரணமாக அக்குழந்தையின் பெயர் வெளியிடப்படவில்லை.

இச்சம்பவம் குறித்து தாய் கெங் கார்டன்ஸ் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் திரு லியூ என்பவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்குப் பேட்டியளித்தார்.

திங்கட்கிழமை மாலை தமது குடும்பத்தினர் உணவருந்திய பிறகு குழந்தை அழும் சத்தம் கேட்டது குறித்து தமது மருமகன் தம்மிடம் கூறியதாக திரு லியூ சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!