தேசிய தினத்தன்று பொது எச்சரிக்கை ஒலி இருமுறை ஒலிக்கும். தீவெங்கும் பல இடங்களில் தேசிய கொடி ஏற்றப்படும் நேரத்தில் காலை 10.30 மணிக்கு முதல் முறையும் இரவு 8.20 மணிக்கு இரண்டாவது முறையும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும். சுமார் 20 விநாடிகள் ஒலி நீடிக்கும்.
இரண்டாவது முறை எழுப்பப்படும் ஒலி சிங்கப்பூரர்கள் அனைவரும் எழுந்து நின்று தேசிய பற்றுறுதி எடுத்துக்கொள்வதற்கானது. பொது எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும் நேரங்களில் மக்கள் குழப்பமடைய வேண்டாம் என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியுள்ளது.