துவாஸ் வட்டாரத்திலுள்ள 66 டெக் கிரெசண்ட் பார்க்கிலுள்ள ஊழியர் தங்கும் விடுதியை புதிய கொவிட்-19 கிருமித்தொற்றுக்குழுமமாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. முன்பு கொரோனா கிருமித்தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டோர் இந்தக் குழுமத்தில் தங்கியிருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதற்கிடையே கோல்டன் வில்லேஜ் ஜூரோங் பாயிண்ட், ஏபிசி ப்ரிக்வர்க்ஸ் ஈரச்சந்தை, ஜாலான் புக்கிட் மேராவிலுள்ள உணவு நிலையம், ஜூரோங் வெஸ்டிலுள்ள டேங் டீ ஹவுஸ், உட்லண்ட்ஸ் ஷெங் ஷியோங் பேரங்காடி ஆகிய இடங்களும் பிறருக்கு எளிதில் பரவக்கூடிய கொரோனா நோயாளிகள் சென்றுள்ள இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த இடங்களுக்கான முழு பட்டியல் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் உள்ளது. அந்த இடங்களுக்குச் சென்ற நோயாளிகள் எத்தனை மணிக்கு அங்கு வந்தார்கள், எவ்வளவு காலம் தங்கினார்கள் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.
நேற்று புதிததாக அறிவிக்கப்பட்ட 242 நோயாளிகளில் சமூக அளவில் பாதிக்கப்பட்ட ஒருவர் 67 வயது சிங்கப்பூரர். சுகாதார அமைச்சின் மேம்பட்ட சமூக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டார்.