ஜயகுமாருக்கு உயரிய தெமாசெக் விருது

முன்னாள் அமைச்சர் எஸ். ஜயகுமாருக்கு உயரிய தெமாசெக் விருது வழங்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக சிங்கப்பூருக்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற சேவையை அடையாளம் கண்டு, அவரை கௌரவிக்கும் வகையில் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.

30க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அமைச்சராகவும் அரசதந்திரியாகவும் பணியாற்றிய 80 வயது திரு ஜயகுமார், அரசியலில் ஒய்வுபெற்ற பிறகும் சிங்கப்பூருக்குத் தொடர்ந்து சேவையாற்றி வருகிறார். பெட்ரா பிராங்கா சர்ச்சை, மலேசியாவுடனான தண்ணீர் ஒப்பந்தம் போன்றவற்றில் சட்ட, அரசதந்திர ஆலோசனைகளை அவர் ஒய்வுபெற்ற பிறகும்
வழங்கினார்.

திரு ஜயகுமாருக்கு தெமாசெக் விருது வழங்கப்பட வேண்டும் என வெளியுறவு அமைச்சு அவரது பெயரை முன்மொழிந்தது.
“சர்ச்சைக்குரிய விவகாரங்களைக் கையாள்வது தொடர்பில் அவருக்கு இருக்கும் பழுத்த அனுபவம், உத்திபூர்வப் பார்வை ஆகியவை எங்களது இளம் வெளியுறவுச் சேவை மற்றும் சட்டச் சேவை அதிகாரிகளுக்குப் பலன் தந்துள்ளது,” என்று வெளியுறவு அமைச்சு திரு ஜயகுமாருக்குப் புகழாரம் சூட்டியது. தமக்கு தெமாசெக் விருதை வழங்க எடுக்கப்பட்டுள்ள முடிவு குறித்து திரு ஜயகுமார் ஆச்சரியம் தெரிவித்தார். அதற்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டார்.

“நாட்டின் நலன் தொடர்பான முக்கிய விவகாரங்களில் நான் ஈடுபட்டுள்ளேன். எனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டால் நாட்டுக்குப் பலன் கிடைக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங்கும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் நம்பிக்கை வைத்துக் கேட்டுக்கொள்ளும்போது, என்னால் மறுக்கவா முடியும்?,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தொலைபேசி மூலம் இன்று முன்தினம் திரு ஜயகுமார் தெரிவித்தார். திரு ஜயகுமார் 1980ஆம் ஆண்டில் அரசியலில் அடியெடுத்து வைத்தார். உள்துறை அமைச்சராகவும் சட்ட அமைச்சராகவும் வெளியுறவு அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார்.

2004ஆம் ஆண்டில் துணைப் பிரதமராக உயர்ந்த திரு ஜயகுமார் 2009ஆம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார். தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார். அதையடுத்து, அவருக்கு மூத்த அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் அரசியலிலிருந்து அவர் ஓய்வு பெற்றார். சிங்கப்பூருக்குத் தொடர்ந்து உதவி செய்வது மூலம் தமது அனுபவத்தைப் பயன்படுத்தி அடுத்த தலைமுறை அமைச்சர்கள், அரசதந்திரிகள், அனைத்துலக வழக்கறிஞர்கள் ஆகியோரை மேம்படுத்த விரும்புவதாக திரு ஜெயகுமார் தெரிவித்தார்.

“நமது அண்டை நாடுகளுடன் நமக்கு நல்ல உறவு இருந்து வருகிறது. இருப்பினும், அவ்வப்போது சில சர்ச்சைகள் ஏற்படுகின்றன. சில சர்ச்சைகள் புதியவையாக இருக்கலாம். மற்றவை நீண்டகாலமாக இருந்து வருபவையாக இருக்கலாம். நான் பல ஆண்டு
களாக எதிர்கொண்ட விவகாரங்களாகவும் அவை இருக்கக்கூடும்,” என்றார் திரு ஜயகுமார்.

இளம் அரசாங்கத் துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவது தமக்கு கிடைத்த மிக அருமையான அனுபவம் என்று அவர் வர்ணித்தார்.“அவர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள். கடுமையாக உழைப்பவர்களும் கூட. நானும் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளேன்,” என்றார் திரு ஜயகுமார்.

திரு ஜயகுமார் அமைச்சராக இருந்தபோது இரவில் நீண்ட நேரம் பணிபுரிந்துவிட்டு மறுநாள் அதிகாலை மீண்டும் வேலையைத் தொடங்குவார் என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் அனைத்துலக விவகாரப் பிரிவின் தலைமை இயக்குநர் திருவாட்டி டெவ்னி ஹோங் நினைவு கூர்ந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!