இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பில் பார்வையாளராகக் கலந்துகொள்ள அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் வேலுச்சாமி முனியப்பராஜ்.
பிடோக் வட்டாரத்திலுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான ‘ஹோம்ஸ்டே லாட்ஜ்’ விடுதியின் நிர்வாகியாகப் பணிபுரியும் 38 வயது திரு வேலுச்சாமி, நாம் ஒன்றுபட்டால் சவால்களை எதிர்கொள்ள முடியும் என்பதைக் கடந்த சில மாதங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
“தேசிய தின அணிவகுப்பை நேரடியாகக் காணும் வாய்ப்பு மிக அரிது,” என்று திரு வேலுச்சாமி கூறினார்.”கிருமிப்பரவலுக்கு மத்தியில் நாங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம். சிங்கப்பூர் மிகச் சிறப்பாக செயலாற்றியுள்ளது,” என்று அவர் கருதுகிறார்.
சிங்கப்பூரின் 55ஆவது தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்டத்தின் முதல் அங்கம் இன்று காலை 9.30 தொடங்கியது. இதில் 150 பார்வையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.