சிங்கப்பூரில் புதிதாக 175 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சிங்கப்பூரிலுள்ள மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 55,104க்கு அதிகரித்துள்ளது.
இவர்களில் ஒருவர் சமூக அளவில் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர் என்று சுகாதார அமைச்சு கூறியது.
வெளிநாடுகளில் இந்நோயைத் தொற்றி சிங்கப்பூருக்கு வந்துள்ள மூவருக்கு வீட்டில் தங்கும் உத்தரவுக் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
எஞ்சியோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளைச் சேர்ந்தவர்கள்.

