உலகில் உள்ள மிகச் சிறந்த ஒய்வுகாலத் திட்டங்களில் மத்திய சேமநிதித் திட்டமும் ஒன்று என்று சிங்கப்பூரர்கள் பலருக்கு ஏற்கெனவே தெரியும் என்று சில வெளிநாட்டு நிதி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
37 நாடுகளின் ஓய்வுகாலத் திட்டங்களை ஆய்வு செய்த மெல்பர்ன் மெர்செர் உலகளாவிய ஓய்வூதிய குறியீடு 2019, தரநிலைப் பட்டியலில் சிங்கப்பூரின் மத்திய சேமநிதித் திட்டத்தை ஏழாவது இடத்தில் வைத்துள்ளது. நெதர்லாந்தின் ஓய்வுத் திட்டம் முதல் நிலையில் உள்ளது. அதனை எடுத்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஃபின்லாந்து, சுவீடன், நார்வே ஆகியவற்றின் ஓய்வுகாலத் திட்டங்கள் இடம்பெறுகின்றன. ஹாங்காங் 15வது இடத்திலும் மலேசியா 17வது இடத்திலும் இந்தோனீசியா 28வது இடத்திலும் தென்கொரியா 29வது இடத்திலும் சீனா 30வது இடத்திலும் ஜப்பான் 31வது இடத்திலும் உள்ளன.
ஆசிய நாடுகளுக்கான பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தை வகிக்கிறது.நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளின் ஓய்வுகாலத் திட்டங்களுக்கு மட்டும் ‘ஏ’ தரநிலை வழங்கப்பட்டுள்ளது.
இவ்விரு நாடுகளின் ஓய்வுகாலத் திட்டங்கள் நல்ல அனுகூலங்களைத் தரும் உயர்தரமிக்கவை என்றும் அவை நம்பகரமான, நிலை யான திட்டங்கள் என்றும் நிதித் துறை ஆய்வுக்கான மொனேஷ் நிலையம் கூறியது.
பத்து நாடுகளுடன் சேர்த்து சிங்கப்பூருக்கும் ‘பி’ தரநிலை வழங்கப்பட்டுள்ளது. மத்திய சேமநிதியின் சிறப்புகளை நிலையம் தனது அறிக்கையில் வெளியிட்டது. வீடுகளை வாங்குவது, மருத்துவச் சேவைகள் போன்றவற்றுக்கு மத்தி சேமதியைப் பயன்படுத்திலாம் என்பதை நிலையம் சுட்டியது. அதே சமயத்தில் ஓய்வு காலத்துக்குத் தேவையான நிதி பாது காக்கப்படுவதாக அது தெரிவித்தது. இருப்பினும் மூன்று இடங்களில் சிங்கப்பூர் அதன் ஓய்வுகாலத் திட்டத்தை மேம்படுத்தலாம் என்று அது பரிந்துரை செய்தது.
தனியார் ஓய்வுகாலத் திட்டங்களைப் பெறுவதை எளிமைப்படுத்துவது, சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசி கள் இல்லாத சிங்கப்பூரரில் பணிபுரியும் வெளிநாட்ட வருக்கும் மத்திய சேமநிதி யைத் தொடங்குவது, சிங்கப்பூரர்களின் ஆயுட்காலம் அதிகமாக இருப்பதால் ஓய்வுகால சேமிப்பை வெளியே எடுப்பதற்கான வயதை உயர்த்துவது ஆகிய பரிந்துரை கள் முன்வைக்கப்பட்டன.