இணைய உரையாடல் செயலி 'பீடாக்' வழி, 12 வயது சிறுமியுடன் பழகி, பின் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 26 வயது ஆடவருக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள், 10 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. சிறுமியின் கைபேசியை அவளின் தாயார் எடுத்துப் பார்த்ததில், ஆடவர் அனுப்பியிருந்த தகாத குறுந்தகவல்களைப் பற்றி அறிந்துகொண்டார். அதையடுத்து அவர் சிறுமியின் அத்தையுடன் சிறுமியின் பள்ளியிலும் போலிசிலும் தகவல் தெரிவித்தார். ஆடவர் தன் முன்னாள் காதலிகள் இருவரின் நிர்வாணப் படங்களை 'டம்ளர்' சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்ததும் தண்டனை விதிப்புக்காக கருத்தில் கொள்ளப்பட்டது.
சிறுமியை சீரழித்த ஆடவருக்கு சிறை, பிரம்படி
1 mins read
-

