5,400 கடைகளில் வசதி

‘எஸ்ஜிகியூஆர்’ குறியீடு மூலம் பணம் செலுத்தும் முறை

சந்தை, உணவங்காடி நிலையங்களில் 18,000 கடைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்குக் கடைகள், வாடிக்கையாளர்கள் மின்னிலக்க முறைப்படி பணம் செலுத்தும் வசதியை அளித்து வருகின்றன.

இவ்வாண்டு ஜூன் மாதத்தில் உணவுக்கடைக்காரர்களுக்கான ‘ஹாக்கர்ஸ் கோ டிஜிட்டல்’ திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அடுத்த ஆண்டின் நடுப்பகுதிக்குள் ஒருங்கிணைந்த ‘எஸ்ஜிகியூஆர்’ குறியீடு’ மூலம் மின்னிலக்கப் பணம் செலுத்தும் முறைக்கு மாற அந்த 18,000 கடைக்காரர்களுக்கும் உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

கடந்த இரு மாதங்களில் மேலும் 1,900 கடைக்காரர்கள் இந்த மின்னிலக்கத் தீர்வை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அத்தகைய கடைக்காரர்களின் எண்ணிக்கை 5,400ஆக அதிகரித்துள்ளது.

லோரோங் 8 உணவங்காடி நிலையத்திற்கு நேற்று சென்ற தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், ‘கியூஆர்’ குறியீடு மூலம் பணம் செலுத்தும் முறையை அதிகமான கடைக்காரர்கள் ஏற்றுக்கொண்டிருப்பது ஊக்கமளிப்பதாக உள்ளது என்றார்.

‘எஸ்ஜிகியூஆர்’ குறியீடு முறைக்குப் பதிவுசெய்துகொள்ளும் உணவுக்கடைக்காரர்கள், அடுத்த ஆண்டில் குறிப்பிட்ட ஐந்து மாதங்களில் குறைந்தது 20 முறை ரொக்கமில்லாப் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் பட்சத்தில், $300 ஊக்கத்தொகை பெறத் தகுதிபெறுவர். இதுவரை 2,000க்கும் மேற்பட்ட உணவுக்கடைக்காரர்கள் ஊக்கத்தொகை பெற்றுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!