பாதுகாவலர் மரணம் தவிர்க்கப்பட்டு இருக்கலாம்: மரண விசாரணை அதிகாரி

1-அல்டிடியூட் கட்டடத்தின் உச்சியில் உள்ள மதுக்கூடத்தில் இருந்து கடந்த ஆண்டு நான்கு மீட்டர் உயரம் கீழே விழுந்த பகுதிநேர பாதுகாவல் அதிகாரியின் மரணம், பாதுகாப்பு தரநிலைகள் முறையாகக் கடைப்பிடிக்கப் பட்டிருந்தால் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று மரண விசாரணை அதிகாரி நேற்று தெரிவித்தார்.

ஒன் ராஃபிள்ஸ் பிளேஸ் எனும் முகவரியில் உள்ள அந்த மதுக்கூடத்தில் பாதுகாப்பு விதிமீறல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று திரு ஷோன் டுங் மன் ஹோனின் (இடது படம்) மரணம் குறித்து விசாரித்த மரண விசாரணை அதிகாரி திருவாட்டி கமலா பொன்னம்பலம் கூறினார்.
மரண விசாரணை முடிவின்போது நீதிமன்றத்தில் இருந்த திரு டுங்கின் குடும்பத்தைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் வோங் சூ சி, அந்த மதுக்கூடத்தின் மீது திரு டுங்கின் குடும்பம் வழக்கு தொடுக்கப் போவதாகத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி திரு டுங் விழுந்த போது, இரண்டாம் மாடியில் இருந்த அந்தக் குழியைச் சுற்றி (வலது படம்) தடுப்புகளும் எச்சரிக்கை அறிவிப்புகளும் இருந்தன என்றும் தடுப்புகளை யாராவது நகர்த்தியிருக் கலாம் என்றும் திருவாட்டி கமலா கூறினார்.
சம்பவத்தன்று அதிகாலை 1.30 மணிக்கு அடையாளம் தெரியாத இருவர் அந்தக் குழியை நோக்கி செல்வதைப் பார்த்த திரு டுங், அபாயம் குறித்து அவர்களை எச்சரிக்க ஓடினார். ஆனால், துரதிருஷ்டவசமாக டுங்கே அந்தக் குழிக்குள் விழுந்து விட்டார். பின்னர் அங்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ அதிகாரிகள் டுங்கின் மரணத்தை உறுதிப்படுத்தினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!