அரசாங்கமும் மக்களும் ஒன்றிணைந்து அதிகம் சாதிக்கமுடியும்: மாலிக்கி

2 mins read
dad19609-dec9-402f-9bea-248366a4939b
-

ஒன்­றி­ணைந்து பங்­கா­ளி­க­ளா­கச் செயல்­ப­டு­வ­தன் மூலம் அர­சாங்­க­மும் சிங்­கப்­பூ­ரர்­களும் கொவிட்-19 கொள்­ளை­நோ­யில் இருந்து வலு­வு­டன் மீண்­டெ­ழுந்து நாடு சிறப்­ப­டை­வ­தில் அதி­கம் சாதிக்க முடி­யும் என்று டாக்­டர் மாலிக்கி ஒஸ்­மான் தெரி­வித்து உள்­ளார்.

பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ரும் கல்வி, வெளி­யு­றவு இரண்­டாம் அமைச்­ச­ரு­­மான டாக்­டர் மாலிக்கி, மெய்­நி­கர் கலந்­து­ரை­யா­ட­லின்­போது இத­னைக் குறிப்­பிட்­டார்.

ஒன்­றி­ணைந்து வலு­வு­டன் மீண்­டெ­ழும் சிங்­கப்­பூர் என்­னும் பொருள்­படும் தலைப்­பில் நேற்று அந்­தக் கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது. ஜூன் மாதம் தொடங்கி அக்­டோ­பர் வரை­யில் ஒரு தொட­ராக இந்­தப் பொது கலந்­து­ரை­யா­டல் நிகழ்த்­தப்­பட்டு வரு­கிறது. திட்­ட­மி­டப்­பட்ட 12 கலந்­து­ரை­யா­டல்­களில் நேற்று நடை­பெற்­றது ஐந்­தா­வது நிகழ்வு.

'ஒன்­றி­ணைந்த சிங்­கப்­பூர்' என்­னும் விரி­வான பிர­சார இயக்­கத்­தின் ஒரு பகு­தி­யாக கலந்­து­ரை­யா­டல்­கள் நடை­பெற்று வரு­கின்­றன. கொள்கைத் தீர்­வு­களை இணைந்து உரு­வாக்க அர­சாங்­க­மும் சிங்­கப்­பூ­ரர்­களும் பங்­கா­ளித்­து­வம் கொண்டு கருத்­துப் பரி­மாற்­றம் செய்­வதே 'ஒன்­றி­ணைந்த சிங்­கப்­பூர்' பிர­சா­ரம்.

ஒவ்­வொரு கலந்­து­ரை­யா­ட­லும் இரண்டு மணி நேரம் வரை நீடிக்­கும். பல­த­ரப்­பட்ட பின்­னணியைக் கொண்ட 40 முதல் 50 வரை­யிலா­ன­ வர்­கள் இதில் பங்­கேற்று கருத்­து­க­ளைத் தெரி­விப்­பர். அர­சாங்­கம் சார்­பில் முக்­கிய தலை­வர்­கள் கலந்து­கொள்­வர்.

தொடக்க உரை நிகழ்த்­திய டாக்­டர் மாலிக்கி, சிங்­கப்­பூ­ரர்­கள் இது­வரை கற்­றுக்­கொண்­ட­தை­யும் வலு­வு­டன் மீண்­டெ­ழும் சிங்­கப்­பூர் எப்­படி இருக்­க­வேண்­டும் என அவர்­கள் மீண்­டும் கற்­பனை செய்­வ­தை­யும் பிர­தி­ப­லிக்­கும் வாய்ப்பை கொவிட்-19 நெருக்­கடி ஏற்­ப­டுத்­தித் தந்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

நாட்டு மக்­கள் அனை­வ­ரின் எல்­லா­வித ஆற்­றல்­க­ளை­யும் ஆலோ­ ச­னை­க­ளை­யும் ஒன்­று­தி­ரட்­டக் கூடிய முயற்சி இது என்­றார் அவர். இருப்­பி­னும் ஆலோ­ச­னை­க­ளைப் பொறுத்­த­மட்­டில் அர­சாங்­கம் மட்­டும் தனித்து இயங்­காது என்று அவர் குறிப்­பிட்­டார்.

"இயன்­ற­வரை எத்­தனை சிங்­கப்­பூ­ரர்­க­ளின் கருத்­தைத் திரட்ட முடி­யுமோ அத்­த­னை­யை­யும் திரட்ட முயல்­வோம். சிங்­கப்­பூரை முன்­னோக்­கிச் செலுத்த எல்­லாத் தரப்­பி­ன­ரும் தெரி­விக்­கும் சாத்­தி­ய­முள்ள யோச­னை­க­ளுக்­கும் தீர்­வு­க­ளுக்­கும் செவி­சாய்ப்­போம்," என்று டாக்­டர் மாலிக்கி தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூரை மீட்ெட­டுத்து உரு­வாக்­கு­வ­தற்­கான மீள்­தி­றன் குறித்தே நேற்­றைய கலந்­து­ரை­யா­ட­லில் பல­ரும் கருத்து தெரி­வித்­த­னர். ஆட்­கு­றைப்பு அதி­க­ரிப்­பது குறித்து கவலை தெரி­வித்த சிலர், வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைச் சார்ந்­தி­ருக்­கும் போக்­கைக் குறைக்க வேண்­டும் என்­ற­னர்.

கலந்­து­ரை­யா­ட­லுக்­குப் பின்­னர் இணை­யம் வழி­யாக நடை­பெற்ற பேட்­டி­யில் பங்­கேற்ற பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா, சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­க­ளது வாழ்க்­கைக்­கான முன்­னு­ரி­மை­களை மீண்­டும் ஆரா­யும் நிலை­யை­யும் பெரும் அனு­ச­ரிப்­பு­களை மேற்­கொள்ள வேண்­டிய சூழ­லை­யும் கொள்­ளை­நோய் ஏற்­ப­டுத்தி இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

பங்­கேற்­பா­ளர் ஒரு­வரை மேற்­கோள் காட்­டிய அவர், கிரு­மித் தொற்­றின் தாக்­கம் சின்­னஞ்­சி­றி­யது அல்ல என்­றார். மக்­கள் தாங்­க­ளா­க­வும் அர­சாங்­கத்­து­டன் இணைந்­தும் செய்ய வேண்­டி­யவை நிறைய இருப்­ப­தா­க­வும் குமாரி இந்­தி­ராணி கூறி­னார்.