இன்றைய நண்பகல் நிலவரப்படி புதிதாக 68 பேருக்கு கொவிட்-19 கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சிங்கப்பூரில் கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 56,099 ஆக உயர்ந்துள்ளது.
சமூக அளவில் எந்தத் தொற்றும் ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடந்து அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல் விவரங்கள் இன்றிரவு அறிவிக்கப்படும்.

