நான்கு தேசிய தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும்

நான்கு தேசிய தேர்வுகளும் திட்டமிட்டபடி நடக்கும்

2 mins read
e15ffabf-cd00-4f3c-8b19-e375e9d59931
படம்: சாவ் பாவ் -

கொவிட்-19 சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செப்டம்பர் 14 முதல் டிசம்பர் 2 வரை பிஎஸ்­எல்இ, என் நிலை, ஓ நிலை மற்­றும் ஏ நிலை ஆகிய நான்கு தேசிய தேர்­வு­களும் செப்­டம்­பர் 14 முதல் டிசம்­பர் 2 வரை திட்­ட­மிட்­ட­படி நடத்­தப்­படும்.

இருந்­தா­லும் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றில் இருந்து மாண­வர்­களுக்­கும் தேர்வு கண்காணிப்பா­ளர்­க­ளுக்­கும் பாது­காப்பு வழங்­கும் வகை­யில் சிறப்பு ஏற்­பா­டுகளும் இடம்­பெ­றும்.

கிரு­மி தொற்றி உள்ள, தடுத்து வைக்­கப்­பட்டு உள்ள அல்­லது வீட்­டி­லேயே இருக்க வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்ள மாண­வர்­களைப் பொறுத்­த­வ­ரை­யில் அவர்­கள் தேர்வு எழுத அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்­கள் என்று கல்வி அமைச்­சும் சிங்­கப்­பூர் தேர்வு மற்­றும் மதிப்­பீட்­டுக் கழ­க­மும் தெரி­வித்­தன.

இத்­த­கைய நிலை­யில் உள்ள மாண­வர்­க­ளுக்கு அவரவர் அடிப்­படை­யில் விதி­வி­லக்­கும் உண்டு. இந்த மாண­வர்­கள் தேர்­வுக் கழ­கம் நிர்­வ­கித்து நடத்­தும் மைய­மான ஓர் இடத்­தில் தனித்­தனி அறை­யில் அமர்ந்து தேர்வு எழுத வேண்டி இருக்­கும்.

இவர்­க­ளுக்­காக தனி கழி­வ­றை­கள் ஒதுக்­கப்­படும்.

ஒவ்­வொரு தேர்வு அறை­யின் உள்ளே செல்­ல­வும் வெளியே வர­வும் தனித்­தனி வழி­கள் இருக்­கும்.

பொதுப் போக்­கு­வ­ரத்தைப் பயன்­ப­டுத்த முடி­யாது என்­ப­தால் இத்­த­கைய மாண­வர்­கள் சொந்த வாக­னத்­தில் அல்­லது டாக்­சி­யில் தேர்வு இடத்­திற்­குச் செல்ல வேண்­டும். கிரு­மி தொற்­றி­யோ­ரு­டன் தொடர்­பு­கொண்­ட­தன் கார­ண­மாக விடுப்­பில் உள்ள மாண­வர்­களுக்கும் தேர்வு எழுத அனு­ம­தி இராது.

இவர்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று இல்லை என்­பது உறு­தி­யான பிறகு­தான் தேர்வு எழுத முடி­யும். இவர்­களுக்கு நடத்­தப்­படும் பரி­சோ­தனை­க­ளுக்கு ஆகும் செல­வை அர­சாங்­கம் ஏற்­கும்.

மருத்­துவ விடுப்­பில் இருக்­கும் சுவா­சக் கோளாறு உள்ள மாண­வர்­கள் கிரு­மித்­தொற்று இல்­லாத பட்­சத்­தில், தேர்வு எழுத அனு­மதிக்­கப்­ப­டு­வார்­கள்.

தேர்வு எழுத தவ­றும் மாண­வர்கள், அதற்­கான சரி­யான கார­ணங்­க­ளைத் தெரி­யப்­ப­டுத்­தி­னால் சிறப்பு பரி­சீ­ல­னைக்கு இடம் உண்டு. இந்த ஆண்­டில் ஏறக்­குறைய 98,000 மாண­வர்­கள் இந்த நான்கு தேர்­வை­யும் எழு­து­வர்.

தேர்­வு­கள் நடக்­கும்­போது பள்ளி க­ளி­லும் தேர்வு இடங்­க­ளி­லும் பாது­காப்பு விதி­மு­றை­கள் தொடர்ந்து கடைப்­பி­டிக்­கப்­படும். தேர்வு ஏற்­பா­டு­களில் ஏதே­னும் மாற்­றம் இருந்­தால் அது பற்றி தக­வல்­கள் தெரி­விக்­கப்­படும் என்று இந்த அமைப்­பு­கள் குறிப்­பிட்டு இருக்­கின்­றன.