பொருளியலை பாதுகாப்பான முறையில் திறக்க வேண்டும்

பொருளியலை பாதுகாப்பான முறையில் திறக்க வேண்டும்

2 mins read
388d568a-a3e0-48e0-911e-ee6cb09a70aa
கோப்புப்படம்: எஸ்டி -

சிங்­கப்­பூர் தொடர்ந்து வளர வேண்டு­மா­னால் அது தன்­னு­டைய பொரு­ளி­ய­லைப் பாது­காப்­பான முறை­யி­லும் நிலைத்­தன்­மை­யோ­டும் மீண்­டும் திறந்­து­விட வேண்டி இருக்­கிறது என்று வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்து இருக்­கி­றார்.

இவ்­வாறு செய்ய வேண்­டு­மானால் நிறு­வ­னங்­கள் படிப்­ப­டி­யாக தங்­கள் நட­வ­டிக்­கை­களை மீண்­டும் தொடங்க வேண்­டும். அதிக ஆபத்­துள்ள நட­வ­டிக்­கை­க­ளைப் பொறுத்தவரை­, வேலை­யி­டங்­களில் கடு­மை­யான பாது­காப்பு ஏற்­பா­டு­கள் இடம்­பெற வேண்­டும் என்று அவர் தெரி­வித்­தார்.

கிரு­மித்­தொற்று ஏற்­ப­டும்­போது அவற்றை உடனே கண்­டு­பி­டித்து தனி­மைப்­ப­டுத்­தும் வகை­யில் பரி­சோ­தனை உள்­ளிட்ட பல­வற்­றை­யும் கணி­ச­மான அள­விற்கு விரி­வு­படுத்­தப் போவ­தாக அமைச்­சர் குறிப்­பிட்டு இருக்­கி­றார்.

இப்­படி செய்­வ­தன் மூலம் பொரு­ளி­ய­லின் இதர பகுதிகள் தொடர்ந்து செயல்­பட முடி­யும் என்­றார் அவர்.

அதி­பர் ஹலிமா யாக்­கோப் புதிய நாடா­ளு­மன்­றத்தைத் தொடங்­கி­வைத்து ஆற்­றிய உரைக்­கான தமது அமைச்­சின் பிற்­சேர்க்­கை­யில் திரு சான் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

வர்த்­தக தொழில் அமைச்சு தொழில் நிமித்­த­மாக பாது­காப்­பான முறை­யில் குறு­கிய, நீண்­ட­கால பய­ணங்­கள் இடம்­பெற வச­தி­க­ளைச் செய்­து­கொ­டுக்­கும் என்று குறிப்­பிட்ட அமைச்­சர், அனைத்­து­லக பய­ணங்­களை மீண்­டும் தொடங்­கும் கண்­ணோட்­டத்­தில் அது இவ்­வாறு செய்­யும் என்­றார்.

உலக வாய்ப்­பு­க­ளைப் பயன்­படுத்­திக் கொண்டு புதிய வேலை­களை உரு­வாக்க ஊழி­யர்­க­ளுக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் உத­வும் ஒரு வழி­யாக இது இருக்­கும் என்றாரவர்.

அதி­பர் உரை­யின் பிற்­சேர்க்­கை­யாக நேற்று ஐந்து அமைச்­சு­கள் பல விவ­ரங்­களை அறி­வித்­தன.

வர்த்­தக தொழில் அமைச்சு முன்­னு­ரிமை அளிக்­கும் திட்­டங்­களும் செயல்­பா­டு­களும் அவற்­றில் இடம்­பெற்­றி­ருந்­தன.

சிங்­கப்­பூர் தன்­னு­டைய உல­க­ளா­விய தொடர்­பு­களை பலப்­ப­டுத்த வேண்­டும்.

பல­வற்­றுக்­கும் மைய­மாக திகழ்­கின்ற சிங்­கப்­பூர் இந்த நிலையை மேலும் வலுப்­ப­டுத்த வேண்­டும் என்று வர்த்­தக தொழில் அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

சந்­தை­கள், விநி­யோக முறை, தொழில்­நுட்­பம், ஆற்­றல் ஆகி­ய­வற்­றுக்கு உல­கத்­து­டன் கூடிய தன்­னு­டைய தொடர்­பு­களை சிங்­கப்­பூர் வலுப்­ப­டுத்த வேண்­டும்.

வர்த்­தக வழி­கள் தங்கு தடை­யின்றி இருப்­பதை, ஒத்த கருத்­து­டைய நாடு­க­ளு­டன் சேர்ந்து சிங்­கப்­பூர் மறு­உ­று­திப்­ப­டுத்­தும் என்­றும் அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

சிங்­கப்­பூரை மைய­மா­கப் பயன்­படுத்­தும் வர்த்­த­கர்­க­ளுக்­கும் தள­வா­டப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்­களுக்­கும் புதிய போட்­டித்­தி­றன் அனு­கூ­லங்­களை வழங்­கும் வகை­யில் பல மாதி­ரி­யான போக்­கு­வரத்து ஏற்­பா­டு­களை சிங்­கப்­பூர் உரு­வாக்­கும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

மாறு­கின்ற உல­கப் பொரு­ளி­யலைக் கைகொள்­வ­தற்கு ஏற்ற உத­வி­க­ளைச் செய்து அதன்­மூ­லம் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் நிறு­வ­னங்­களுக்­கும் பல வாய்ப்­பு­கள் ஏற்­படுத்­தித் தரப்­படும் என்ற அர­சாங்­கத்­தின் உறு­தியை அமைச்­சர் மீண்­டும் தெரி­வித்­தார்.

நிறு­வ­னங்­கள் உரு­மா­ற­வும் அனைத்­து­ல­க­ம­ய­மாகவும் வளர்ச்சி காண­வும் பல அமைப்பு­க­ளு­டன் சேர்ந்து அமைச்சு செயல்­படும் என்றும் அவர் கூறி­னார்.

இருந்­தா­லும் எல்லா வேலை­களை­யும் எல்லா நிறு­வ­னங்­க­ளை­யும் பாது­காத்­து­விட முடி­யாது என்று அவர் எச்­ச­ரித்­தார்.

ஆயி­னும் ஆட்­கு­றைப்­புக்கு ஆளா­ன­வர்­கள் புதிய திறன்­களைக் கற்­றுக்­கொண்டு புதிய வேலை­களைப் பெற உதவி கிடைக்­கும் என்று அமைச்­சர் திரு சான் உறுதி­பட கூறி­னார்.