வழிபாட்டுத் தலங்கள், வீவக பொது இடங்கள், இதர புற இடங்களில் 2020 ஆகஸ்ட் 4 முதல் 50 பேருடன் (மணமக்கள் உட்பட, திருமணத்தை நடத்திவைப்பவர்,
ஒப்பந்தக்காரர்கள் தவிர) திருமணம் நடத்தலாம்.
வீடு, சிவில் மற்றும் முஸ்லிம் திருமண பதிவகக் கட்டடம், தேசிய அரும்பொருளகத்தில் குறிப்பிட்ட இடங்களில் நடக்கும் திருமணத்தில் 10 பேர் வரை கலந்துகொள்ளலாம்.
(மணமக்கள் உட்பட, திருமணத்தை நடத்தி வைப்பவர்,
ஒப்பந்தக்காரர்கள் தவிர).
திருமண விருந்து
ஒவ்வொரு ஜோடியும் ஒரு திருமண விருந்தை நடத்த அனுமதிக்கும் சுகாதார அமைச்சின் முன்னோடித் திட்டத்தின்படி, விருந்தில் 50 பேர் வரை கலந்துகொள்ளலாம். உணவு, பானம் ஆகியவற்றை வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ள உணவகம், ஹோட்டல்களில் கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
இதர திருமண ஏற்பாடுகள்
சடங்கு, சம்பிரதாயங்கள் உட்பட இப்போதைய வரம்புக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். (ஒவ்வொரு வீட்டிலும் ஐவர் வரை கூடலாம் அல்லது வீட்டுக்கு வெளியே ஐந்து பேர் வரை கூடலாம்). இத்தகைய நிகழ்ச்சிகளை
நடத்துவோர், ஏற்பாடு செய்வோர் பாதுகாப்பு நிபந்தனைகளை உறுதிப்படுத்த வேண்டும்.

