வேலைகள்: கவலையைப் போக்கி கைகொடுக்கும் அணுகுமுறை

வேலைகள்: கவலையைப் போக்கி கைகொடுக்கும் அணுகுமுறை

4 mins read
82e8f8ab-731c-4d7a-b260-0d3b1a781521
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 ஏற்­ப­டுத்தி வரும் பாதிப்­பு­களிலேயே அதிக கவலை தரு­வ­தாக இருப்­பது வேலை­தான். மேலும் ஆட்­கு­றைப்பு இருக்­குமோ என்ற அச்­சம் இல்­லாத நாள் இல்லை.

கிரு­மித்­தொற்று கார­ண­மாக ஏறக்­கு­றைய எல்லா துறை­க­ளுமே முடங்­கிப்­போய் கிடப்­ப­தால் அவை எல்­லாம் தலை­யெ­டுக்­கும் கால­மும் வேலை­வாய்ப்­பு­கள் மறு­ப­டி­யும் அதி­க­ரிக்­கும் கால­மும் வெகு­வி­ரை­வில் கனிந்து வரு­வ­தற்­கான அறி­கு­றி­யும் தெரி­ய­வில்லை.

வேலை பாணி­களும் மாறி இருக்­கின்­றன. கொவிட்-19க்குப் பிறகு சில வகை வேலைகள் இருக்­குமா என்­பதுகூட தெரி­ய­வில்லை.

ஆகை­யால் எதிர்­கா­லத்­தில் வேலை பெற வேண்டு­மா­னால் புதி­தாக எந்­தெந்த தகுதிகள் தேவைப்­படும் என்­ப­தை­யும் துல்­லி­ய­மா­கக் கணிக்க முடி­யாத சூழல் நில­வு­கிறது. இவை எல்­லாம் ஊழி­யர்­களை, வேலை தேடு­வோரை, வேலை இழந்­த­வர்­களை மேலும் பய­மு­றுத்துவதாக இருக்­கின்றன.

பல பிரம்­மாண்ட உல­க­ளா­விய நிறு­வ­னங்கள் வேறு வழி­யில்­லா­மல் ஆட்­கு­றைப்­பில் இறங்கி இருக்­கின்­றன. அமெ­ரிக்­கா­வின் 'போயிங்' நிறு­வ­னமும் சிங்­கப்­பூ­ரின் 'எஸ்­ஐஏ இஞ்­ஜினி­யரிங் கம்­பெனி' நிறு­வ­ன­மும் சேர்ந்து 'போயிங் ஆசிய பசி­பிக் ஏவி­யே­ஷன்ஸ் சர்­விசஸ்' என்ற கூட்­டுத்­தொ­ழிலை நடத்தி வரு­கின்­றன. இந்தக் கூட்டு நிறு­வ­னம் 13 விழுக்­காடு ஊழி­யர்­களை வீட்­டுக்கு அனுப்­பி­விட்டது.­

ரோல்ஸ் ராய்ஸ் நிறு­வ­னம் சிங்­கப்­பூ­ரில் காற்­றாடி தக­டு­களைத் தயா­ரித்து வந்­தது. இப்­போது இந்­தத் தொழி­லில் சில­வற்றை பிரிட்­ட­னுக்கே அது இடம் மாற்­று­கிறது. 240 ஊழி­யர்­க­ளை­யும் வேலை­யில் இருந்து நீக்கிவிட்­டது.

இப்­படி வேலை நில­வ­ரங்­கள் மோசம் அடைந்து வரு­வ­தால் சிங்­கப்­பூ­ரில் சிங்­கப்­பூ­ரர்­களை மைய­மாகக் கொண்ட ஊழி­யர் அணியை வலுப்­ப­டுத்த வேண்­டி­யது அர­சாங்­கத்­திற்­கும் முத­லா­ளி­க­ளுக்­கும் முன்­பை­விட இப்­போது முக்­கி­ய­மா­ன­தாகி இருக்­கிறது.

இதன் கார­ண­மா­கத்­தான் 'எம்பிளாய்­மெண்ட் பாஸ், 'எஸ் பாஸ்' ஆகி­ய­வற்­றுக்­கான அடிப்­படை ஊதி­யத்தை உயர்த்­து­வது என்று அர­சாங்­கம் அண்­மை­யில் முடிவு செய்து இருக்­கிறது. இந்த ஆண்­டில் இது­வரை இரண்டு முறை இந்த ஊதி­யம் உயர்த்­தப்­பட்­டுள்­ளது. இது சரி­யான திசை­யில் எடுக்­கப்­பட்ட முடி­வா­கத் தெரி­கிறது.

நிறு­வ­னங்­கள் கூடு­மான வரை­யில் தகுதி உள்ள, பொருத்­த­மான சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு முத­லில் வாய்ப்­பளித்­து­விட்டு அதற்­குப் பிற­கு­தான் வெளி­நாட்­டி­னரை அவை தேட வேண்­டும்.

இதைத்­தான் அர­சாங்­கத்­தின் புதிய முடிவு நிறு­வ­னங்­க­ளுக்கு நினை­வூட்­டு­கிறது.

காலம் நல்ல நிலை­யில் இருக்­கும்போது சிங்­கப்­பூ­ரர்­களை மைய­மா­கக் கொண்ட ஊழியர் அணியை உரு­வாக்கி தக்­க­வைத்­துக்­கொள்ள வேண்­டி­யது மிக முக்­கி­ய­மா­னது. அதே­வே­ளை­யில், காலம் பாத­க­மாக இருக்­கை­யில் இப்­ப­டிச் செய்­ய­வேண்­டி­யது உயிர்­நா­டி­ போன்றது.

இத்­த­கைய அனு­ம­தி­க­ளின் பேரில் வெளி­நாட்­டி­னரை வேலை­யில் அமர்த்­திக்­கொள்ள சில நிறு­வ­னங்­க­ளுக்­குச் செலவு அதி­க­மா­கும். சிங்­கப்­பூர் ஊழி­யர்­கள் எந்த அள­வுக்­குப் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­குகிறார்­கள் என்­பதை பிர­தி­ப­லிப்­ப­தா­கவே இந்த முடிவு இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் முன்­பை­விட அதி­க­மான ஊழி­யர்­கள் வேலை பார்க்­கும் நேர­மும் குறைந்து இருக்­கிறது. அவர்­கள் வேறு உபரி வேலை­க­ளைத் தேட வேண்­டிய சூழ­லும் ஏற்­பட்டு இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரும் இந்­தி­யா­வும் தங்­க­ளுக்கு இடை­யில் பரந்த பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு உடன்­பாட்­டைக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்­தி­யர்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வந்து வேலை பார்க்­க­வும் வசிக்­க­வும் அந்த உடன்­பாடு உரிமை வழங்­கு­கிறது என்ற தவ­றான கருத்துகள்­கூட அண்­மை­யில் தலைதூக்­கின.

சிங்­கப்­பூ­ரு­டன் இத்­த­கைய உடன்­பா­டு­க­ளைச் செய்­து­கொண்­டுள்ள நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வந்து வேலை பார்க்­க­வும் வசிக்­க­வும் அத்­த­கைய உடன்­பா­டு­கள் உரிமை தரு­கின்­றன என்று நில­விய தப்­பெண்­ணங்­களை அர­சாங்­கம் அண்­மை­யில் போக்கி இருக்­கிறது.

அர­சாங்­கம் அளித்த அந்த விளக்­கம், வேலை என்று வரும்­போது எப்­போ­துமே சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குத்­தான் முத­லி­டம் என்­பதை தெள்­ளத்­தெ­ளி­வாக மக்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்த எடுக்­கப்­பட்ட முயற்­சி­யா­கவே பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூரை பொறுத்தவரை, உள்­ளூர் ஊழி­யர் அணிக்கு உறு­து­ணை­யா­கத்­தான் தர­மான, ஆற்றல்­ மி­குந்த வெளி­நாட்­டி­னர் அனு­ம­திக்­கப்­ப­டு­கி­றார்­கள். இதுவே சிங்­கப்­பூ­ரின் வெளி­நாட்டு ஊழி­யர் கொள்கை.

சிங்­கப்­பூ­ரில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பிரச்­சினை அண்­மை­யில் புதிய நாடா­ளு­மன்­ற அமர்வில் விவா­திக்­கப்­பட்­டது. உறுப்­பி­னர்­கள் பல­ரும் சிங்­கப்­பூர்­களை மைய­மாகக் கொண்ட அணி­யைப் பாது­காக்க அர­சாங்­கம் மேலும் பல­வற்­றைச் செய்­ய­வேண்­டும் என்று கேரிக்கை விடுத்­த­னர்.

தங்­கள் அலு­வ­ல­கங்­களில் தங்­களைவிட அதிக எண்­ணிக்­கை­யில் வெளி­நாட்­டி­னர் வேலை பார்க்­கி­றார்­கள் என்­றும் தங்­க­ளுக்­குக் கிடைக்­காத வேலை வெளிநாட்­டி­ன­ருக்­குக் கிடைத்­த­தா­க­வும் மக்­கள் கூறி­ய­தாக உறுப்­பி­னர்­கள் பலரும் மன்­றத்­தில் குறிப்­பிட்­ட­னர்.

வெளி­நாட்­டின­ருக்கு கொடுக்­கப்­படும் 'ஒர்க் பாஸ்' எனப்­படும் அனு­ம­தி­கள் தொடர்­பான கொள்­கை­கள் கடு­மை­யாக இல்­லையோ என்­று­கூட மக்­கள் கேட்­ட­தாக மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அவற்­றுக்­கெல்­லாம் பிர­த­மர் லீ சியன் லூங் பதில் அளித்­தார்.

வேலை என்று வரும்­போது எப்­போ­துமே குடி­மக்­க­ளுக்­குத்­தான் முதல் முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். முதல் உதவி அவர்­க­ளுக்­குத்­தான் கிடைக்­கும் என்று பிர­த­மர் லீ நாடாளுமன்­றத்­தில் உறுதி கூறினார்.

அதே­வே­ளை­யில், வெளி­நாட்­டி­ன­ருக்கு முற்­றிலும் கத­வைச் சாத்­தி­விட முடி­யாது என்­றும் அவர் விளக்­கி­னார். சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு எவ்­வித பல­னும் இல்லை எனில் இங்கு வெளி­நாட்­டி­ன­ருக்கு வேலை­களை உரு­வாக்­கு­வ­தில் எந்த அர்த்­த­மும் இல்லை என்­றார் பிர­த­மர் லீ.

உல­கம் முழு­வ­தும் இருந்து ஆற்­றல்­மிக்­க­வர்­களுக்­குக் கத­வு­க­ளைத் திறந்து வைத்து அதன்­மூ­லம் நாம் நமக்கு அதிக வாய்ப்­பு­களை உரு­வாக்­கிக் கொள்­கி­றோம் என்று பிர­த­மர் விளக்­கம் அளித்­தி­ருந்­தார்.

நம்­மு­டைய பொரு­ளி­யலை வளர்த்து சிங்­கப்­பூரர்­க­ளுக்கு நல்ல வேலை­களை உரு­வாக்­கு­வ­தும் வாழ்க்­கைத் தரத்தை உயர்த்­து­வ­தும்­தான் நமது இலக்கு. இதைச் சாதிக்க நமக்கு வெளி­நாட்டு ஊழி­யர்­களும் 'ஒர்க் பர்­மிட்' அனு­ம­தி­யின் பேரில் இங்கு பணி­யாற்­று­வோ­ரும் உத­வு­கி­றார்­கள்.

சிங்கப்பூர் தனது பொரு­ளி­யல் போட்­டித்­தி­றனை உலக அள­வில் மேம்­ப­டுத்தி அதைத் தக்­க­வைத்­துக்கொள்ள வேண்­டும். இது கட்­டா­ய­மா­னது.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் போட்­டி­யாக இருப்­பதைத் தடுப்­பது அல்ல நோக்­கம். மாறாக அத்­தகைய ஒரு போட்டி உள்­ளூர் ஊழி­யர்­க­ளுக்­குப் பாத­க­மான முறை­யில் இருக்­கக்­கூ­டாது என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­து­தான் இதில் நியாயமான, அவசியமான அணுகுமுறையாக இருக்கும்.

முத­லா­ளி­கள் எந்­த­வொரு சூழ்­நி­லை­யி­லும் உள்­ளூர் ஊழி­யர்­களை நியா­ய­மாக நடத்த வேண்­டி­யது கட்­டா­ய­மான ஒன்று. அது­வும் கொவிட்-19 சூழ­லில் முத­லா­ளி­க­ளுக்­குத் தார்­மீக கட­மை­யா­க­வும் இது இருக்­கிறது என்­பதைச் சொல்ல வேண்­டி­ய­தில்லை.