தேசிய நூலக வாரியப் புதுப்பிப்புப் பணிகளின் செலவு, வரம்பைத் தாண்டி $1.72 மில்லியனானது

தேசிய நூலக வாரியப் புதுப்பிப்புப் பணிகளின் செலவு, வரம்பைத் தாண்டி $1.72 மில்லியனானது

2 mins read
97b092e8-cff4-4a07-9f24-3dd166ff4f0f
செலவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரிகளின் கண்காணிப்பில் ஏற்பட்ட குறைபாடுகளால் தேசிய ஆவணக் காப்பகத்தின் புதுப்பிப்புப் பணிகளின் செலவு, நிர்ணயிக்கப்பட்ட வரம்பைத் தாண்டியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேசிய நூலக வாரி­யத்­தின் கீழ் செயல்­படும் தேசிய ஆவ­ணக் காப்­ப­கத்­தின் புதுப்­பிப்­புப் பணி­க­ளுக்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட வரம்­பைத் தாண்டி செலவு $1.72 மில்­லி­ய­னைத் தொட்­டது என்று அர­சாங்­கத் தலை­மைக் கணக்­காய்­வா­ளர் அலு­வ­ல­கத்­தின் அறிக்கை தெரி­வித்­துள்­ளது.

இதற்கு அதன் அதி­கா­ரி­க­ளின் கண்­கா­ணிப்­பில் ஏற்­பட்ட குறை­பா­டு­களே கார­ணம் என்று நேற்று வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

தேசிய ஆவ­ணக் காப்­ப­கத்­தின் புதுப்­பிப்­புப் பணி­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட தொகை $20.53 மில்­லி­யன். 18 மாதப் பணி­க­ளுக்­குப் பிறகு அது கடந்த ஆண்டு எப்­ரல் மாதத்­தில் மீண்­டும் திறக்­கப்­பட்­டது.

புதுப்­பிப்­புப் பணி­கள் தொடர்­பான குத்­த­கை­களில் பாதிக்கு மேற்­பட்­ட­வைக்கு உறு­தி­யான ஒப்­பு­த­லுக்­குப் பதி­லாக, கொள்கை அள­வி­லேயே ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டது.

"அதாவது, குத்­த­கைக்­கான செல­வை உறுதி செய்­யா­ம­லேயே பணி­கள் தொடங்­கு­வ­தற்கு தேசிய நூலக வாரி­யம் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது," என்று அர­சாங்­கத் தலை­மைக் கணக்­காய்­வா­ளர் அலு­வ­ல­கம் தெரி­வித்­தது.

ஒரு சந்­தர்ப்­பத்­தில், தொகை­வித்­தி­யா­சம் $370,000 என்ற அள­வுக்­கு உயர்ந்­துள்­ளது.

இப்­ப­டிப்­பட்ட கண்­கா­ணிப்­புக் குறை­பா­டு­க­ளால், புதுப்­பிப்­புப் பணி­க­ளுக்­கான செலவு நிர்­ண­யிக்­கப்­பட்ட வரம்­பை­விட எட்டு விழுக்­காடு கூடு­த­லாகி, $22 மில்­லி­ய­னைக் கடந்­தது.

செல­வு­, வரம்­பைத் தாண்டி விட்­டது என்று அறிந்து, ஐந்து மாதங்­க­ளுக்­குப் பிற­கு­தான் தேசிய நூலாக வாரி­யம் ஒப்­பு­தல் அளிக்­கும் அமைப்­பி­டம் கூடு­தல் நிதி கேட்­ட­தும் கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­டது. இது நிதிக் கட்­டுப்­பாட்­டில் காணப்­பட்ட பல­வீ­னத்­தைக் காட்­டு­கிறது என்­றும் தலை­மைக் கணக்­காய்­வா­ளர் அலு­வ­ல­கம் விளக்­கி­யது.

அறிக்கை குறித்து நேற்று கருத்­து­ரைத்த தேசிய நூலக வாரி­யம், "புதுப்­பிப்­புப் பணி­கள் தாம­த­மின்றி நடை­பெ­று­வ­தற்­காக 2018ஆம் ஆண்டு செப்­டம்­ப­ரில்தான் கொள்கை அள­வில் ஒப்­பு­தல் அளிக்­கும் முறையை அறி­மு­கப்­ப­டுத்­தி­னோம்." என்­றது.

எல்லா உட­னடி புதுப்­பிப்­புப் பணி­கள் உட்­பட இனி­வ­ரும் அனைத்­துப் பணி­க­ளுக்­கும் முறை­யான ஆவ­ணங்­க­ளு­டன் ஒப்­பு­தல் அளிக்­கும் முறை மேற்­கொள்­ளப்­படும் என்று வாரி­யம் நேற்று உறு­தி­ய­ளித்­தது.

ஜூரோங் நக­ராண்­மைக் கழ­கத்­தின் செயல்­பா­டு­கள் குறித்து கருத்­து­ரைத்த தலை­மைக் கணக்­காய்­வா­ளர் அலு­வ­ல­கம், 26,000 நிறு­வ­னங்­க­ளுக்கு தனது இடத்தை முறை­யான ஒப்­பு­தல் இல்­லா­மல் வாட­கைக்கு விட்­டது என்­றும் இது கடு­மை­யான செயல்­முறை குறை­பா­டு­ என்­றும் சுட்­டி­யது.

அந்த 26,000 நிறு­வ­னங்­கள் ஜேடி­சியை தங்­க­ளின் அதி­கா­ர­பூர்வ முக­வ­ரி­யா­கக் குறிப்­பிட்­டி­ருந்­தா­லும் அது ஜேடி­சி­யின் ஒப்­பு­தல் இல்­லா­மல் நடை­பெற்­றது. இது­வும் கவ­னிக்­கப்­ப­டா­மல் விடப்­பட்­டது.

அதன் நான்கு தொழி­லி­யல் இடங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட திடீர் சோத­னை­யில் அங்கு சட்­டத்­துக்­குப் புறம்­பான சரக்கு சேமிப்­பும், டீசல் எரி­பொ­ருள் விற்­ப­னை­யும் நடை­பெற்­றது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.