இரட்டைக் கொலை: திரையில் பார்த்ததை வைத்து தம்பதியை கொன்ற பணிப்பெண்

2 mins read
d291d88d-3bc6-4f8f-b97e-d195e63ccab1
-

பிடோக்­கில் வயது முதிர்ந்த தம்­பதி­யைக் கொன்று பின்­னர் இந்­தோ­னீ­சி­யா­வுக்கு தப்­பிய பணிப்­பெண் 'த ரிவெஞ்­சர் குவீன்' என்ற திைரப்­ப­டத்­தில் வரும் ஒரு காட்­சி­யில் பார்த்­ததை வைத்து அந்­தத் தம்­ப­தி­யைக் கொன்­ற­தாக கூறப்­ப­டு­கிறது.

இந்­தோ­னீ­சிய உச்ச நீதி­மன்ற ஆவ­ணங்­க­ளி­லி­ருந்து இது தெரிய வந்­துள்­ள­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தாள் தெரி­வித்­துள்­ளது.

கானா அப்­துல் முயிஸ் என்ற பெய­ரி­லும் அைழக்­கப்­படும் கஸானா (படம்) என்ற அந்­தப் பணிப்­பெண் திரு சியா நிம் ஃபோங், வயது 79, என்­ப­வ­ரை­யும் அவ­ரது மனைவி திரு­மதி சின் செங் ஃபா என்­ப­வ­ரை­யும் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி கொலை செய்­தார்.

இவர் தற்­பொ­ழுது இந்­தோ­னீ­சிய உச்ச நீதி­மன்­றத் தீர்ப்­புக்­கி­ணங்க 20 ஆண்டு சிறை­வா­சம் அனு­ப­வித்து வரு­கி­றார்.

இந்த இரட்­டைக் கொலை­களை செய்த பின் அவர் இந்­தோ­னீ­சி­யா­வுக்கு தப்­பி­யோ­டி­னார். அங்கு அவர் ஒரு­வா­ரம் கழித்து பிடி­பட்­டார்.

அவர் கொலை செய்த முழு விவ­ரங்­களும் சென்ற வாரம் நடை­பெற்ற மரண விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது. இந்­தோ­னீ­சி­யா­வில் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­யில் புகைப்­படங்­களும் இடம்­பெற்­ற­தால் அவற்­றில் வய­தான அந்­தத் தம்­ப­தி­யர் எவ்­வ­ளவு கொடூ­ர­மா­கக் கொல்­லப்­பட்­ட­னர் என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது.

திரு சியா­வைக் கட்­டிப்­போட்ட பின் கஸானா அவரை ஒரு நாற்­கா­லி­யால் பல­முறை திரும்­பத் திரும்ப, அவர் வலி­யால் கத­று­வ­தைப் ெபாறுப்­ப­டுத்­தாது, அடித்­துள்­ளார். அத்­து­டன், அவ­ரது மனைவி திரு­மதி சின் செக் ஃபாவின் நெஞ்­சில், அவர் தரை­யில் வீழ்ந்து கிடந்த நிலை­யி­லும், தொடர்ச்­சி­யாக மிதித்த­தும் தெரி­ய­வந்­துள்­ளது.

அந்­தப் புகைப்­ப­டங்­களில் தம்­பதி­யர் படுக்கை அறைத் தரை­யி­லும் கழி­வ­றைத் தரை­யி­லும் குழந்தை படுத்­தி­ருப்­ப­து­போல் இருந்த நிலை­யைக் காட்­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சம்­ப­வத்­தன்று காலை சுமார் 10.00 மணிக்கு திரு­மதி சின் தம்­மைத் திட்­டி­ய­தா­க­வும் அதன் பின்­னர் தான் திரு சியாவை படத்­தில் வந்­த­தைப் போல் கட்­டிப்­போட்­ட­தா­கத் தெரி­வித்­தார்.