'பணிப்பெண் விடுவிப்பில் தலைமைச் சட்ட அதிகாரியின் தலையீடு இல்லை'

1 mins read
a003e2d5-48b9-4971-89b8-2254d8124d34
பார்த்தி லியானி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இந்­தோ­னீ­சிய பணிப்­பெண் பார்த்தி லியா­னிக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­கள் மீது சட்­ட­பூர்வ முடி­வு­களை எடுப்­ப­தில் தலை­மைச் சட்ட அதி­காரி லூசி­யன் வோங்கோ துணைத் தலை­மைச் சட்ட அதி­கா­ரி­களோ தலை­யி­ட­வில்லை என்று தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கம் நேற்று தெரி­வித்­தது.

சாங்கி விமான நிலை­யக் குழு­மத் தலை­வர் லியூ மன் லியோங் வீட்­டில் பணிப்­பெண்­ணாக இருந்­த­போது அவர் மீது சுமத்­தப்­பட்ட திருட்­டுக் குற்­றச்­சாட்­டில் இருந்து பார்த்தி லியானி (படம்) விடு­விக்­கப்­பட்­டார். அதன் தொடர்­பில் அலு­வ­ல­கம் வெளி­யிட்ட அறிக்­கை­யில், தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கம் வழக்­க­மா­கக் கையா­ளும் வழங்­கு­களில் இது­வும் ஒன்று. அதே­நே­ரம், தலை­மைச் சட்ட அதி­காரி அல்­லது துணை தலை­மைச் சட்ட அதி­கா­ரி­யின் தலை­யீடு இதற்­குத் தேவைப்­ப­டாது என்று குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

மேலும் இவ்­வ­ழக்கு தொடர்­பான மறு­ஆய்வு துணை தலை­மைச் சட்ட அதி­காரி ஹரி குமார் நாயர் தலை­மை­யில் நடை­பெற்று வரு­வ­தா­க­வும் அறிக்கை தெரி­வித்­தது.

உயர் நீதி­மன்­றத்­தில் தீர்ப்பு வெளி­யா­ன­தும் வழக்­கின் மறு­ஆய்­வுப் பணி­யி­லி­ருந்து தலை­மைச் சட்ட அதி­காரி லூசி­யன் வோங் செப்­டம்­பர் 5ஆம் தேதியே தாமாக முன்­வந்து வில­கி­விட்­ட­தா­க­வும் அறிக்கை கூறி­யது. இருப்­பி­னும் அதற்­கான கார­ணங்­களை அது விவ­ரிக்­க­வில்லை.