நிதி நிறுவனங்களில் நடத்தை தரம் மேம்பட நாணய ஆணையத்தின் புதிய நெறிமுறைகள்

நிதி நிறுவனங்களில் நடத்தை தரம் மேம்பட நாணய ஆணையத்தின் புதிய நெறிமுறைகள்

2 mins read
bffa0b58-4476-4aff-9284-0c4ed9848eca
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நிதி நிறுவனங்களின் மூலா­தார காரி­யங்­களை நிர்­வ­கிப்­ப­தற்­கும் அவற்றை நடத்­து­வ­தற்­கும் மூத்த நிர்­வா­கி­களே பொறுப்­பேற்க வேண்டும் என்ற ஏற்­பாட்டை வலுப்­படுத்­து­வ­தற்­கான வழி­காட்டி நெறி­மு­றை­கள் வெளி­யி­டப்­பட்டுள்­ளன.

அந்­தப் புதிய நிய­தி­கள், நிதி நிறு­வ­னங்­க­ளின் நடத்தை தரத்தை மேம்­ப­டுத்­தும் என்­றும் அறி­விக்­கப்­பட்டு இருக்­கிறது. சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் நேற்று அந்த நெறி­மு­றை­கள் அடங்­கிய 23 பக்க பத்­தி­ரத்தை வெளி­யிட்­டது.

உல­க­ள­வில் 2008ல் நடந்த நிதி நெருக்­க­டி­யின் விளை­வைக் கருத்­தில் கொண்டு உரு­வாக்­கப்­பட்டு இருக்­கும் அந்த நெறி­மு­றை­கள் அத்­த­கைய தவ­று­கள் மறு­ப­டி­யும் இடம்­பெ­றா­மல் இருப்­பதை உறு­தி­செய்­யும்.

இதற்­குத் தோதாக மூத்த நிர்­வா­கி­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் பதில் சொல்ல வேண்­டிய கலா­சா­ரத்தை அவை பேணி உரு­வாக்கி பலப்­படுத்­தும்.

நிதி நிறு­வ­னங்­களில் உயர்ந்த பத­வி­களை வகிப்­போர் அதற்­குப் பொருத்­த­மா­ன­வர்­க­ளாக, முறை­யா­ன­வர்­க­ளாக இருக்­க­வேண்­டும். தங்­க­ளு­டைய ஊழி­யர்­க­ளின் செயல்­க­ளுக்கு அவர்­களே பொறுப்­பேற்க வேண்­டும்.

அவர்­க­ளது கண்­கா­ணிப்­பின் கீழ் நடை­பெ­றும் அலு­வல்­க­ளுக்­கும் அவர்­களே பதில்­சொல்­லி­யாக வேண்­டும் என்று ஆணை­யத்­தின் நெறி­மு­றை­கள் தெரி­விக்­கின்­றன.

புதிய நெறி­மு­றை­கள், விதி­விலக்கு பெற்ற அல்­லது 50 பேருக்கும் குறை­வான ஊழி­யர்­க­ளைக் கொண்ட நிறு­வ­னங்­கள் தவிர எல்லா நிதி நிறு­வ­னங்­க­ளுக்­கும் முற்­றி­லும் பொருந்­தும்.

கடந்த 2008ல் நிகழ்ந்த உலக நிதி நெருக்­க­டியை அடுத்து வங்கி­கள் மற்­றும் நிதி­ நி­று­வ­னங்­க­ளின் மூத்த நிர்­வா­கி­க­ளின் பணி­கள் கவனமாக அலசி ஆரா­யப்­பட்­டன.

அத்­த­கைய நெருக்­கடி எப்­படி நிகழ்ந்­தது என்­ப­தற்குப் பல நாடு­களும் விளக்­கம் கேட்­டன.

நிதி நிறு­வ­னங்­க­ளி­டையே யார் யார் எதற்கு பொறுப்­பேற்க வேண்­டும் என்ற ஏற்­பாட்­டில் குறை­பாடுகள் காணப்­பட்­டதே நெருக்­க­டிக்கு முக்­கிய கார­ணம் என்­பது தெரி­ய­வந்­தது. சந்­தையோ அர­சாங்­கமோ சரி­யாக்க நட­வ­டிக்­கை­களை அமல்­ப­டுத்­த­வில்லை. பய­னுள்ள தடை­களும் விதிக்­கப்­ப­ட­வில்லை என்று நிதி நிறு­வ­னங்­கள் அச்­சம் தெரி­வித்­திருந்தன.

சிங்­கப்­பூ­ரில் 2018 ஏப்­ரல் மாதம் ஆலோ­சனை அறிக்கை ஒன்று தாக்­கல் செய்­யப்­பட்டு அதன்­ தொடர்­பில் கருத்­து­கள் சேக­ரிக்­கப்­பட்­டன. அவற்­றின் அடிப்­ப­டை­யில் இப்­போது இந்த ஆணை­யத்­தின் புதிய வழி­காட்டி நெறி­மு­றை­கள் செம்­மைப்­ப­டுத்­தப்­பட்டுள்ளன.

புதிய நெறி­மு­றை­க­ளு­டன் 17 பக்க தக­வல் அறிக்கை ஒன்­றும் இடம்­பெற்று இருக்­கிறது. ஊழி­யர் சேர்ப்பு, தொடர்பு வழி­கள், கண்­கா­ணிப்பு, மதிப்­பீடு, நிர்­வா­கச் செயல்­தி­றன் போன்ற துறை­களில் நடத்தை நிய­தி­களை வங்­கி­களும் நிதி நிறு­வ­னங்­களும் எப்­படி ஏற்­படுத்த வேண்­டும் என்­பதை அந்தத் தக­வல் அறிக்கை விளக்­கு­கிறது.

குறை­பா­டு­கள் காணப்­பட்­டால் வங்­கி­க­ளுக்­கு, நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக இந்த ஆணை­யம் கண்காணிப்பு அல்­லது அம­லாக்க நட­வ­டிக்­கை­களை எடுக்­கும் என்­பதை நினை­வூட்­டும் தக­வல்­களும் அதில் இடம்­பெற்று இருக்­கின்­றன.