இல்லாத நாணயத்தை விற்பதாகச் சொல்லி கொள்ளை: 3வது குற்றவாளிக்குச் சிறை, பிரம்படி

இல்லாத நாணயத்தை விற்பதாகச் சொல்லி கொள்ளை: 3வது குற்றவாளிக்குச் சிறை, பிரம்படி

2 mins read
48e827b2-db45-4ff2-af5a-10f699612b06
சையது முக்தார் சையது யூசோப்புக்கு 40 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 12 பிரம்படிகள் கொடுக்கும்படி உத்தரவிடப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இணைய மெய்­நி­கர் நாணய மோசடி வலை வீசி அதில் ஒரு­வரைச் சிக்கவைத்து அவரிடம் $365,000 கொள்ளை அடித்­த­தில் சம்­பந்­தப்­பட்­டி­ருந்த ஆட­வர் ஒரு­வ­ருக்கு மூன்று ஆண்­டு­கள் மற்­றும் நான்கு மாதச் சிறைத் தண்­டனை (40 மாதம்) விதிக்­கப்­பட்­டது. 12 பிரம்­ப­டி­கள் கொடுக்­கும்­ப­டி­யும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

சையது முக்­தார் சையது யூசோப், 39, என்ற அந்த சிங்­கப்­பூ­ரர், கொள்ளை அடித்­த­தாகக் கூறும் குற்­றச்­சாட்­டின் பேரில் புதன்­கி­ழமை குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டி­ருந்­தார்.

இந்­தக் கொள்ளை குற்­றச்செய­லில் நான்கு பேருக்­குத் தொடர்பு உண்டு. அவர்­களில் இந்த வாரம் சைய­தை­யும் சேர்த்து மூன்று பேருக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

ஜெரோ­மல் கீ மிங் லி, 29, என்ற சிங்­கப்­பூ­ர­ருக்கு மூன்று ஆண்­டு­கள் சிறை­யும் 12 பிரம்­ப­டி­களும் தண்­ட­னை­யாக விதிக்­கப்­பட்­டன.

முகம்­மது அப்­துல் ரஹ்­மான் முகம்­மது என்­ப­வ­ருக்கு எதி­ரான வழக்கு இன்­ன­மும் நிலு­வை­யில் உள்­ளது. என்­றா­லும் இவ­ரு­டைய முன்­னாள் மனை­வி­யான யோகேஸ்­வரி ராமன், 35, என்­ப­வ­ருக்கு ஒன்­பது வார சிறைத் தண்­டனை கிடைத்­தது.

திருட்­டுப் பொருளை நேர்­மை­யற்ற முறை­யில் பெற்­றது, அர­சாங்க ஊழி­ய­ரி­டம் பல­வந்­த­மாக நடந்­து­கொண்­டது ஆகி­ய வற்­றுக்­காக இந்த மாது தண்­டிக்­கப்­பட்­டார். கொள்­ளைச் சம்­ப­வம் பற்றிய விவரங் கள் விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டன.

கீயும் அப்­துல் ரஹ்­மா­னும் 2018 ஏப்­ரல் மாதம் ஒரு திட்­டம் போட்­டார்­கள். இணைய மெய்நி­கர் நாண­யம் வாங்க வரு­வோரை, அத்­த­கைய நாண­யம் எதை­யும் வாங்கு வோருக்கு மாற்­றி­விடா­மல் அல்­லது விற்கா­ம­லேயே கொள்ளை அடிப்­பது அவர்­களின் திட்­டம். மலே­சி­யா­வைச் சேர்ந்த பாங் ஜுன் ஹாவ் என்­ப­வர் அவர்­க­ளி­டம் சிக்­கி­னார்.

சிங்­கப்­பூ­ரில் மெய்­நி­கர் நாண­யம் வாங்க விரும்­பிய பாங், $365,000 பணத்­து­டன் 2018 ஏப்­ரல் 8 ஆம் தேதி சிங்­கப்­பூ­ருக்கு வந்து மிடில் ரோட்­டில் இருக்­கும் ஹோட்டல் 81-ல் தங்­கி­னார். அவர் பணத்தை மலே­சி­யா­வில் இருந்து எடுத்து வந்­தாரா என்­பது தெரி­ய­வில்லை.

அப்­துல் ரஹ்மான் முக்­தா­ரு­டன் தொடர்பு கொண்டு கொள்ளையடிக்கும் திட்­டத்தை அவ­ரி­டம் கூறி­னார். அப்­துல் ரஹ்­மா­னு­டன் சென்று கொள்ளை அடித்­து­விட்டு இரு­வ­ரும் முக்­தா­ரின் காரில் தப்­பிச் சென்­று­விட வேண்­டும் என்­பது ஏற்­பாடு.

இரு­வ­ரும் மெய்­நி­கர் நாணய வியா­பாரி­யான லீ சீ குவோக் என்­ப­வ­ரு­டன் திரு பாங்­கின் அறைக்கு இரவு சுமார் 11 மணிக்­குச் சென்­ற­னர். பணத்தைத் திரு பாங் காட்­டி­னார். உடனே முக்­தார் திரு பாங்கை இடது கன்­னத்­தில் குத்­தி­னார். திரு பாங் தடுக்க முயன்­றார். முக்­தார் அவ­ரைக் குத்­தி­னார்.

பிறகு அப்­துல் ரஹ்­மான் பணப்­பை­யைப் பறித்­துக்­கொண்­டார். இரு­வ­ரும் தப்­பிச் சென்­ற­னர். முக்­தா­ருக்கு $10,000 கிடைத்­தது. அடுத்த நாள் அவர் உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வ­டி­யில் பிடி­பட்­டார்.

முக்­தார் $30,000 பிணை­யில் வெளியே இருக்­கி­றார். அவர், அக்­டோ­பர் 29ல் சரண் அடைந்து தண்­ட­னையை அனு­ப­விக்கத் தொடங்­கு­வார் என்று தெரிவிக்கப்பட்டது.