தனியார் வாடகை கார், டாக்சி ஓட்டுநருக்கு ஆதரவு தொடரும்

தனியார் வாடகை கார், டாக்சி ஓட்டுநருக்கு ஆதரவு தொடரும்

2 mins read
8ef6e8af-30ed-4958-9440-97d7f3c0d5d9
படம்: பெரித்தா ஹரியான் -

தனி­யார் வாடகை கார் மற்­றும் டாக்சி ஓட்­டு­நர்­க­ளுக்கு கொவிட்-19 ஆத­ர­வுத் திட்­டங்­கள் முடிந்த பிற­கும் ஏதோ ஒரு வகை­யில் உதவி தொடர்ந்து கிடைக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள அத்­த­கைய வாகன ஓட்­டு­நர்­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய கட்­ட­ணச் செல­வு­களை ஈடு செய்ய இப்­போது இடம்­பெற்று வரும் ஆத­ர­வுத் திட்டங்­கள் இந்த மாதம் முடி­­கின்­றன.

இந்த ஓட்­டு­நர்­க­ளுக்­குத் தொடர்ந்து உத­வும் திட்­டம் தொடர்­பில் போக்­கு­வ­ரத்து அமைச்சு செயல்­பட்டு வரு­வ­தாக போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர் ஃபேஸ்புக்­கில் சனிக்­கி­ழமை தெரி­வித்­தார்.

அமைச்­சர், கடந்த மூன்று வார கால­மாக இத்­த­கைய வாகன ஓட்டு­நர்­க­ளை­யும் சேவை நடத்­து­வோ­ரை­யும் சந்­தித்து பேசி வந்­தார். அப்­போது அவர்­கள் தங்­கள் கவ­லை­களை வெளிப்­ப­டுத்­தி­னர்.

ஆத­ர­வுத் திட்­டங்­கள் விரை­வில் முடி­வ­டைய இருப்­பதை அவர்­கள் அமைச்­ச­ரி­டம் எடுத்­துக் கூறி­னர். வயது கூடிய வாகன ஓட்­டு­நர்­கள் இந்­தத் தொழி­லையே பெரி­தும் நம்பி இருப்­ப­தால் அவர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைப் பாது­காக்க உதவு முடி­யுமா என்று சிலர் கேட்­ட­தா­க­வும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

"அவர்­கள் தெரி­வித்த கருத்­து­கள், யோச­னை­கள் பரி­சீ­லிக்­கப்­படும், உதவித் திட்­டம் பற்றி விரை­வில் அறி­விக்­கப்­படும்," என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, ஆத­ர­வுத் திட்­டம் நீட்­டிக்­கப்­ப­டு­வ­தைத் தான் வர­வேற்­ப­தாக கோஜெக் நிறு­வ­னம் தெரி­வித்­தது. தன் நிறு­வ­னத்­தின் வாகன ஓட்­டு­நர்­கள் எதிர்­நோக்­கும் சிர­மங்­களில் சில­வற்­றைக் குறைக்க அவை உத­வும் என்று நிறு­வ­னம் கூறியது.

கோஜெக் நிறு­வ­னத்­தின் நிர்­வா­கத்­தி­ன­ரும் வாகன ஓட்­டு­நர்­களும் அண்­மை­யில் அமைச்­சரை சந்­தித்­த­னர். கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள வாகன ஓட்­டுர்­க­ளுக்கு உத­வும் திட்­டங்­களை சில மாதங்­க­ளுக்கு முன் அரசு அறி­வித்­தது. இந்­தத் துறைக்கு உதவ மொத்­தம் $216 மில்­லி­ய­னுக்­கும் அதிக தொகை ஒதுக்­கப்­பட்­டது.

ஆத­ரவு நட­வ­டிக்­கை­க­ளின் ஒரு பகு­தி­யாக சிறப்பு நிவா­ரண நிதி ஒன்­றும் உரு­வாக்­கப்­பட்­டது. இதன் மூலம் டாக்சி மற்­றும் தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­கள் ஒரு வாக­னத்­துக்கு ஒரு மாதத்­துக்கு $300 நிவா­ர­ணம் பெறு­கி­றார்­கள். இது இம்­மா­தத்­து­டன் முடி­கிறது.

இது ஒரு­பு­றம் இருக்க, சுய தொழில் வரு­வாய் நிவா­ர­ணத் திட்­டத்­தின் மூல­மாக இவர்­க­ளுக்கு ஒன்­பது மாத காலம் மாதம் $1,000 தொகை கிடைத்து வந்­துள்­ளது. கொவிட்-19 தொற்று கார­ண­மாக சுற்­றுப் பய­ணி­கள் வருகை அறவே இல்­லாத நிலை ஏற்­பட்­டு­விட்­டதால் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டனர்.