தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துவாஸ் சாவடியில் 53,249 புகையிலைப் பொட்டலங்கள் பிடிபட்டன

1 mins read
d17d1537-3bb3-40e2-901f-807bf9ab61d0
படம்: குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் -

துவாஸ் சோத­னைச் சாவ­டி­யில் ஐந்து தண்­ணீர்­த்தொட்டி லாரி­களில் மறைத்து வைக்­கப்­பட்டு கடத்தி வரப்­பட்ட 53,249 புகை­யி­லைப் பொட்­ட­லங்­களை அதி­கா­ரி­கள் இம்­மா­தம் 7ஆம் தேதி காலை சுமார் 6.45 மணிக்­குப் பறி­மு­தல் செய்­தனர்.

அந்த லாரி­களை மலே­சி­யா­வில் இருந்து ஓட்­டி­வந்த ஆட­வர்­கள் ஐந்து பேரை விசா­ர­ணைக்­காக சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் தடுத்து வைத்­துள்­ளது. அவர்­கள் அனை­வ­ரும் மலே­சி­யர்­கள் என்று ஆணையம் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது. பறி­மு­த­லான புகை­யிலை இந்த ஆணை­யத்­தி­டம் ஒப்­படைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றின் மதிப்பு $213,000 ஆகும்.

வாயில் போட்டு மெல்­லக்­கூ­டிய இத்­த­கைய புகை­யி­லைப் பொருட்கள் சிங்­கப்­பூ­ரில் தடை செய்­யப்பட்­டுள்­ளன. இத்­த­கைய தடை செய்­யப்­பட்ட புகை­யி­லைப் பொருட்­களை வாங்க வேண்­டாம் என்­றும் அவற்றை சிங்­கப்­பூ­ருக்­குள் கொண்டு வர­வேண்­டாம் என்­றும் பொது­மக்­க­ளுக்கு ஆணை­யம் அறி­வு­றுத்தி உள்­ளது.

சட்­ட­வி­ரோத புகை­யி­லைப் பொருட்கள் இறக்குமதி, விநி யோகம், விற்பனை தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் www.go.gov.sg/reporttobaccooffences என்ற இணையத்தளம் மூலம் அவற்றைத் தெரிவிக்கலாம்.

அல்லது 6684 2036, 6684 2037 என்ற எண்கள் மூலம் இந்த ஆணை யத்துடன் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.