மோசடி முறியடிப்பு: 108 பேரும் 15 நிறுவனங்களும் சிறப்பிப்பு

மோசடி முறியடிப்பு: 108 பேரும் 15 நிறுவனங்களும் சிறப்பிப்பு

2 mins read
206ff7f0-6c4f-42a9-b59a-96c63f00f4f6
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மோச­டி­க­ளைக் கண்­டு­பி­டித்து அவற்­றைத் தடுக்க உத­விய 108 தனிப்­பட்­ட­வர்­க­ளை­யும் 15 நிறு­வனங்­க­ளை­யும் வர்த்­தக விவ­கா­ரத் துறை விருது வழங்கி பாராட்டி சிறப்­பித்­துள்­ளது.

இத்­த­கைய சிறப்­பிப்­பு­கள், மோசடி­க­ளைத் தடுப்­ப­தில் வர்த்­தக நிறு­வ­னங்­க­ளுக்­கும் அதி­கா­ரி­களுக்­கும் இடை­யில் நில­வும் ஒத்துழைப்பை எடுத்­துக் காட்­டு­கின்­றன.

இந்த விருதுக்கு, 'வர்த்­தக விவ­கா­ரப் பிரி­வின் சமூ­கப் பங்­கா­ளித்­துவ விருது' என்று பெயர்.

இவற்­றைப் பெற்ற நிறு­வனங்களில் வங்­கி­கள், பணம் அனுப்­பும் நிறு­வ­னங்­கள், வர்த்­தக நிறு­வ­னங்­கள் பல­வும் அடங்­கும். சென்ற ஆண்டு இந்த விரு­தைப் பெற்­ற­வர்­கள் 91 மோசடி விவ­காரங்­களைக் கண்­டு­பி­டித்­த­னர்.

அத­னால் $5 மில்­லி­ய­னுக்­கும் அதிக தொகை தப்­பி­யது. 2018ல் 87 மோசடி விவ­கா­ரங்­களில் $1 மில்­லி­ய­னுக்­கும் அதிக தொகை பறி­போக இருந்­தது.

அந்த மோச­டி­க­ளைத் தனிப்­பட்­ட­வர்­களும் பல்­வேறு அமைப்­பு­களும் கண்டுபிடித்து தடுத்துவிட்­ட­தால் பணம் தப்­பி­யது. நிதி நிறு­வ­னங்­கள் விழிப்­பு­டன் உட­னுக்­கு­டன் விவே­க­மாக நடந்­து­கொள்­வது இதற்கு ஒரு கார­ணம் என்று போலிஸ் அதி­கா­ரி­கள் கூறினர்.

வர்த்­தக விவ­கா­ரத் துறை­யும் இத்­த­கைய நிறு­வ­னங்­களும் சேர்ந்து மோசடி தவிர்ப்பு நட­வ­டிக்­கை­களைத் திட்­ட­மிட்டு உரு­வாக்கி அவற்றை அமல்­ப­டுத்­து­வ­தும் இதற்குக் கார­ணம் என்று போலிஸ் தெரி­வித்­துள்­ளது.

இத­னி­டையே, இது பற்றி கருத்­து­ரைத்த வர்த்­தக விவ­கா­ரத் துறை­யின் இயக்­கு­நர் டேவிட் சியூ, "கொவிட்-19 கார­ண­மாக மின்­னி­லக்­கப் பய­னீடு வழக்­க­மா­ன­தாக ஆகி­விட்­டது. இதில் மோச­டி­கள் அதி­கம் தலை­காட்டுகின்­றன. இத்­த­கைய மோச­டி­க­ளைத் தடுப்­ப­தில் போலி­சுக்­கும் சமூ­கத்­துக்­கும் இடைப்­பட்ட ஒத்­து­ழைப்பு மிக­வும் முக்­கி­ய­மா­னது. இதைத்­தான் சமூக பங்­கா­ளித்­துவ விருது எடுத்­துக்­காட்­டு­கிறது," என்று குறிப்­பிட்­டார்.

மோசடிப் பேர்­வ­ழி­கள் சிக்­கலான பல வழி­க­ளைக் கையாண்டு ஏமாற்ற முயல்­கி­றார்­கள்.

இத்­த­கைய மோசடி முயற்சி ஒன்றை அண்­மை­யில் ஒசி­பிசி வங்கி ஊழி­யர்­கள் முறி­ய­டித்­த­னர்.