மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் (சிஎன்பி) நேற்று முன்தினம் தீவு முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் சுமார் $124,000 மதிப்புள்ள போதைப்பொருட்கள் சிக்கின. இச்சம்பவம் தொடர்பாக போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் எட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் ஐவர் சிங்கப்பூரர்கள், மூவர் மலேசியர்கள். இவர்கள் எட்டுப் பேரும் 18க்கும் 50க்கும் இடைப்பட்ட வயதினர் என்று சிஎன்பி குறிப்பிட்டது.
375 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் 37 கிராம் ‘ஹெராயின்’, 135 கிராம் ‘கெட்டமைன்’, ஐந்து ‘எரிமின்-5’ மாத்திரைகள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். அன்று மாலை ரிவர் வேலி ரோட்டு அருகே இருந்த வாகனம் ஒன்றை அதிகாரி கள் சோதனையிட்டபோது 29 வய தும் 48 வயதும் உடைய இரு சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்ட னர். அப்போது அந்த வாகனத்துக்குள் இருந்த ஒரு பழக்கூடை ஒன்றில் இருந்த பப்பாளிப் பழத்தைச் சோதித்தபோது அதனுள் 333 கிராம் ‘ஐஸ்’, இரண்டு பொட்டலங்களில் சுருட்டப்பட்ட 121 கிராம் ‘கெட்டமைன்’ ஆகியன மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. இவை தவிர, வாகனத்திற்குள் இருந்த போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து 18, 22 மற்றும் 27 வயதுகளுடைய மூன்று மலேசியர்கள் பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை நிலையம் அருகே பிடிபட்டனர். அதே நாள் மாலையில் கிளமெண்டி அவென்யூ 4ல் இருவர், புக்கிட் பெர்மாயில் ஒருவர் என அடுத்தடுத்து மூன்று சிங்கப்பூரர்கள் பிடிபட்டனர்.