லிம் வெய் ஷெங் என்பவர் சென்ற ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி மாலை சுமார் 6 மணிக்கு சென்ட்ரல் பொலிவார்ட் மற்றும் மரினா வே இரண்டும் சந்திக்கும் இடத்தில் வேறு ஒரு காரை முந்திச் செல்ல முயன்றார்.
அதற்காக இரண்டு மடங்கு வேகமாக காரை ஓட்டிச் சென்று நடையர்கள் மீது மோதிவிட்டார். மூன்று பேர் காயம் அடைந்தனர்.
மூர்க்கமாக வாகனத்தை ஓட்டி கடும் காயத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இரண்டு குற்றச்சாட்டுகள், முன்யோசனையின்றி செயல் பட்டு காயம் ஏற்படுத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டு ஆகியவற்றின் பேரில் லிம்முக்கு 15 வாரச் சிறைத்தண்டனையும் நான்கு ஆண்டுகள் வாகனம் ஓட்டக்கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்டபோது வேறு ஒரு குற்றச்சாட்டு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.