உட்லண்ட்ஸ் போலிஸ் பிரிவு அதிகாரிகள், இம்மாதம் 19ஆம் தேதி எண் 20 மார்சிலிங் லேன் முகவரி யில் மேற்கொண்ட நடவடிக்கை யில் ஒன்பது ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு வயது 28 முதல் 82 வரை.
பந்தயப் பிடிப்புச் சட்டத்தின்கீழ் வரும் குற்றங்களையொட்டி அவர்கள் பிடிபட்டு இருக்கிறார்கள். $2,200க்கும் அதிக பணமும் ஒரு கைத்தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அறிக்கையில் தெரிவித்த போலிஸ், புலன்விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டது.
குற்றச்செயல்களுக்கு எதிராக தொடர்ந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கையில் போலிஸ் தெரிவித்து இருக்கிறது.
பந்தயப் பிடிப்புச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வரும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் அபராதம், சிறை, அல்லது இரண்டும் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.