பந்தயப் பிடிப்புச் சட்டத்தின்கீழ் 9 பேர் கைது

பந்தயப் பிடிப்புச் சட்டத்தின்கீழ் 9 பேர் கைது

1 mins read

உட்­லண்ட்ஸ் போலிஸ் பிரிவு அதி­கா­ரி­கள், இம்­மா­தம் 19ஆம் தேதி எண் 20 மார்­சி­லிங் லேன் முக­வரி யில் மேற்­கொண்ட நட­வ­டிக்கை யில் ஒன்­பது ஆட­வர்­கள் கைது­செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளுக்கு வயது 28 முதல் 82 வரை.

பந்­த­யப் பிடிப்­புச் சட்­டத்­தின்கீழ் வரும் குற்­றங்­க­ளை­யொட்டி அவர்­கள் பிடி­பட்டு இருக்­கி­றார்­கள். $2,200க்கும் அதிக பண­மும் ஒரு கைத்தொ­லை­பே­சி­யும் பறி­மு­தல் செய்­யப்­பட்டு உள்­ள­தாக அறிக்­கை­யில் தெரி­வித்த போலிஸ், புலன்­வி­சா­ரணை நடந்து வரு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டது.

குற்­றச்­செ­யல்­க­ளுக்கு எதி­ராக தொடர்ந்து கடும் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும் என்­றும் சட்­ட­விரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு எதி­ராக சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் அறிக்­கை­யில் போலிஸ் தெரி­வித்து இருக்­கிறது.

பந்­த­யப் பிடிப்­புச் சட்­டத்­தின் பல பிரி­வு­க­ளின் கீழ் வரும் குற்றச்­செ­யல்­களில் ஈடு­படுவோருக்கு கடும் அப­ரா­தம், சிறை, அல்­லது இரண்­டும் விதிக்க சட்டத்தில் இடம் இருக்­கிறது.