உரிமம் இல்லாமல் போலி நன்கொடை திரட்டு நடத்திய குற்றத்தை 18 வயது மால்கம் சியா ஹான் யு ஒப்புக் கொண்டுள்ளார். $10 மதிப்புடைய அஞ்சல் அட்டைகளை விற்று மனநல மற்றும் உடல் குறைபாடு உள்ளவர்களுக்காக நிதி திரட்டுவதாக சியா மேலும் மூன்று ஆடவர்களுடன் சேர்ந்து ஏமாற்றி வந்ததாகக் கூறப்பட்டது.
இந்த சதித்திட்டத்தில் மொத்தம் $1,375ஐ அவர்கள் வசூலித்ததாக கூறப்பட்டது. சியாவின் நன்னடத்தை அறிக்கை தயாரானதும் நவம்பர் 3ஆம் தேதியன்று தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மூவர் மீதான வழக்குகள் விசாரணையில் உள்ளன.