சிங்கப்பூரில் உள்ள வங்கிகள் சிலவற்றில் சந்தேகத்துக்கு இடமான விதத்தில் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள நிதி தொடர்பான குற்றத் தடுப்பு அமலாக்க அமைப்பு கூறி உள்ளது.
இதில் கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரிலுள்ள டிபிஎஸ், சிஐஎம்பி, டாய்ச் வங்கிகளில் அமெரிக்க டாலர் 4.5 பில்லியன் அளவுக்கு சந்தேகப்படும்படியான பணப் பரிவர்த்தனைகள் நிகழ்ந்துள்ளதாக அது கூறுகிறது.
அத்துடன், 20 ஆண்டுகாலத்தில் சிங்கப்பூரில் 1,781 சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகளில் அமெரிக்க டாலர் 3 பில்லியன் பெற்றுள்ளதுடன் சிங்கப்பூரில் இருந்து அமெரிக்க டாலர் 1.5 பில்லியன் வெளியேறியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது பற்றி தான் அறிந்துள்ளதாகக் கூறும் சிங்கப்பூர் நாணய ஆணையம், இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் சட்டவிரோத பரிவர்த்தனைகளாகக் கொள்ள முடியாது என்றபோதிலும் இதன் தொடர்பான பத்திரிகை செய்திகளைத் தான் கடுமையாக கருதுவதாக ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதில், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் நடவடிக்கை
களுக்கு எதிராக ‘ஃபைனான்ஷியல் டாஸ்க்ஃபோர்ஸ்’ எனப்படும் நிதி நடவடிக்கைக்கான அமலாக்க பிரிவு ஏற்படுத்தியுள்ள அைனத்துலகத் தரநிலைகளுக்கு ஏற்ப சிங்கப்பூரின் ஒழுங்குமுறை கட்டமைப்பு உள்ளதாக ஆணையத்தின் பேச்சாளர் சொல்கிறார்.
“ஊடகங்களில் இதுபோல் வரும் செய்திகளைக் கவனமாக பரிசீலித்து வரும் சிங்கப்பூர் நாணய ஆணையம், எங்களுடைய ஆய்வின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கும்,” என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனை தொடர்பான அறிக்கைளில் தவறு நிகழ்ந்துள்ளது என அர்த்தமாகாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், இது பற்றி ஒழுங்குமுறைக் கண்காணிப்பாளர்கள் மேல் நடவடிக்கை எடுக்க ஏதுவாக வங்கிகள் இவற்றை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை உள்ளது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எடுத்துக்காட்டாக, சிறிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள் இடம்பெறும் ஒரு வங்கிக் கணக்கிற்கு ஒரு பெரிய தொகை வருமானால், அது அந்த வங்கியின் கண்காணிப்பு வளையத்தில் வரும். இதேபோல், ஒருவர் தனது கணக்கில் ஒரு மில்லியன் டாலர் வைத்திருந்து அதை முழுவதுமாக வேறொருவரின் கணக்கிற்கு மாற்றினாலும், அது சந்தேகத்தைக் கிளப்பும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதுபோல் எச்எஸ்பிசி, ஜே பி மோர்கன், டாய்ச் வங்கி, ஸ்டேண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, பேங்க் ஆஃப் நியூயார்க் போன்ற வங்கிகளிலும் சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனைகள் தென்படுவதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கி, 2000ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை 461 பணப் பரிவர்த்தனை சம்பவங்களில் அமெரிக்க டாலர் 596.8 மில்லியன் வெளியேறக் காரணமாக இருந்ததுடன் அமெரிக்க டாலர் 228.3 மில்லியனை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல், சிஐஎம்பி வங்கி அமெரிக்க டாலர் 250.4 மில்லியன் வெளியேறக் காரணமாக இருந்ததுடன் அமெரிக்க டாலர் 34.3 மில்லியனைப் பெற்றுள்ளது.
டாய்ச் வங்கி அெமரிக்க டாலர் 224.3 மில்லியன் வெளியேறக் காரணமாக இருந்து 62 மில்லியன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.