கொரோனா கொள்ளைநோய் நிலவரத்துக்கு இடையிலும் புதிய வீடுகளை வாங்குவதற்கான ஆர்வம் தணியவில்லை என்பதை பென்ரோஸ் கூட்டுரிமை வீட்டு விற்பனை உணர்த்துகிறது. வார இறுதியில் தொடங்கப்பட்ட அதன் விற்பனையில் 60.3 விழுக்காடு விற்பனை ஆகிவிட்டதாக சிம்ஸ் டிரைவில் உள்ள அந்தக் கூட்டுரிமை வீடுகளை நிர்வகிக்கும் ஹோங் லியோங் குழுமம் தெரிவித்து உள்ளது.
மொத்தம் விற்பனைக்கு விடப்பட்ட 566 வீடுகளில் 341 வீடுகள் நேற்று மாலை 5 மணி வரை விற்பனை ஆனதாக அதன் அறிக்கை தெரிவித்தது. ஓரறை வீட்டின் விலை $788,000 முதல் தொடங்கியது. ஈரறை வீடு $943,000 என்றும் மூவறை வீட்டின் விலை $1.33 மில்லியன் என்றும் விற்பனை ஆயின. அதேபோல நான்கறை வீடு $2.11 மில்லியனுக்கு விற்கப்பட்டது. ஓரறை வீட்டின் பரப்பளவு 474 சதுர அடியிலிருந்து தொடங்கும். அதேபோல நான்கறை வீட்டின் அளவு 1,389 சதுர அடி என்றது அறிக்கை.
சதுர அடியின் அடிப்படையில் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டது. எல்லா வீடுகளின் விலை யும் ஒரு சதுர அடி $1,500 முதல் $1,700 வரை விற்கப்பட்டன. வார இறுதி விற்பனையில் பங்கேற்றவர் களில் சுமார் 85 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள் என்றும் எஞ்சிய வர்கள் நிரந்தரவாசிகள் மற்றும் வெளிநாட்டினர் என்றும் ஹோங் லியோங் குழுமம் கூறியது.