தனியார் மருத்துவமனை கட்டணம்; ‘மெடிஷீல்ட் லைஃப்’ வழங்கீட்டைக் குறைக்க பரிந்துரை

தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டணத்தைச் செலுத்த பயன்படுத்தப்படும் மெடிஷீல்ட் லைஃப் வழங்கீட்டுத் தொகையை அடுத்த ஆண்டு முதல் காலாண்டிலிருந்து 35 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காட்டுக்குக் குறைக்க மெடிஷீல்ட் லைஃப் மன்றம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த மாற்றத்தால் ஏழு காப்புறுதித் திட்ட நிறுவனங் களால் வழங்கப்படும் தனியார் ஒருங்கிணைக்கப்பட்ட காப்புறுதித் திட்டம் பாதிப்படையக்கூடும்.

அரசாங்க மருத்துவமனைகளில் கட்டணக் கழிவு பெற்ற வார்டுகளில் தங்கி சிகிச்சை பெறுவோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே மெடிஷீல்ட் லைஃப் காப்புறுதித் திட்டத்தின் முக்கியப் பங்கு.

இந்நிலையில், அரசாங்க மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுபவர்களும் தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுபவர்களும் ஒரே மெடிஷீல்ட் லைஃப் சந்தாத் தொகையைச் செலுத்துகின்றனர்.

ஆனால் அரசாங்க மருத்துவமனைக் கட்டணத்தைவிட தனியார் மருத்துவமனைக் கட்டணம் மிகவும் அதிகம்.

இதனால் வசதியுள்ள நோயாளிகளின் உயர்வான தனியார் மருத்துவமனைக் கட்டணத்துக்கான சந்தாத் தொகையையும் சேர்த்து வசதி குறைந்த நோயாளிகள் செலுத்த வேண்டியதாகிவிடுகிறது.

இதைச் சரிசெய்ய தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுவோர் பயன்படுத்தக்கூடிய மெடிஷீல்ட் லைஃப் வழங்கீட்டை 25 விழுக்காட்டுக்குக் குறைக்க மன்றம் முடிவெடுத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!