சிங்கப்பூரில் மகிழ்உலா கப்பல் பயணங்கள் தொடங்க தயார்

உல்லாசப் பயணத்துக்கான முதல் படியாக மகிழ்உலா கப்பல் பயணத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில் சுகாதார மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்பு ஒன்றை சிங்கப்பூர் சுற்றுப்பயணக் கழகம் உருவாக்கி வருகிறது.

கொரோனா கிருமித்தொற்று சூழல் கருதி இவ்வாண்டு மார்ச் 13 முதல் சிங்கப்பூர் துறைமுகங்களில் சொகுசுக் கப்பல்கள் ஒதுங்க அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து சிங்கப்பூரிலிருந்து உல்லாசக் கப்பல்கள் கிளம்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இருப்பினும், முதல் மூன்று மாதங்களுக்கு அதிகபட்சமாக 50% பலத்தில் மட்டுமே கப்பல்கள் இயங்க முடியும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே இத்திட்டத்தைத் தொடங்கவுள்ள காலகட்டம் குறித்துத் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இத்தகைய திட்டத்திற்குத் தயாராகும் வகையில் உல்லாசக் கப்பல் சான்றிதழ் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. உலகளாவிய சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் தூய்மைத் தரநிலை ஆகியவற்றுக்கு ஏற்ப இது திட்டமிடப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!