கொள்ளைநோய் முறியடிப்பில் மியன்மாரின் முயற்சிகளுக்கு சிங்கப்பூர் கூடுதல் உதவிகளை வழங்க முன்வந்து உள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்றை கண்டறியும் 25,000 பரிசோதனைக் கருவிகள், ஒரு மில்லியன் முகக்கவசங்கள், 200,000 போத்தல் கைசுத்தி கரிப்பான் திரவம் ஆகியவற்றை மியன்மாருக்கு வழங்க சிங்கப்பூர் தயாராக இருப்பதாக அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சியிடம் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
இருப்பினும் இவை எப்போது அனுப்பி வைக்கப்படும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் கிருமித்தொற்றைக் கண்டறியும் சாதனம் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை மியன்மாருக்கு சிங்கப்பூர் அனுப்பி உதவியது.