7.6 மில்லியன் முகக்கவசங்கள் இலவசமாக விநியோகம்

தெமாசெக் அறநிறுவனம் தேசிய அளவில் இலவசமாக வழங்கிய இரண்டாவது முகக்கவச விநியோகத் திட்டத்தின்கீழ், ஏறத்தாழ 7.6 மில்லியன் முகக்கவசங்களைக் குடியிருப்பாளர்கள் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்ற முகக்கவச விநியோகத் திட்டத்தில் சுமார் 3.8 மில்லியன் குடியிருப்பாளர்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக் கவசங்களைப் பெற்றுக் கொண்டனர்.
ஒவ்வொருவருக்கும் இரண்டு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

மக்கள் கழகம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் போன்றவற்றைச் சேர்ந்த தொண்டூழியர்கள் முகக் கவசங்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தெமாசெக் அறநிறுவனம் கடந்த ஜூன், ஜூலை மாதம் நடத்திய முதல் முகக்கவச விநியோகத் திட்டத்தின்கீழ் 9.3 மில்லியன் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டன. அவற்றில் 300,000 முகக்கவசங்கள், தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!