சிங்கப்பூர் பொருளியல் மேலும் சுருங்காமல் தடுப்பு

சிங்கப்பூர் பொருளியல் மேலும் சுருங்காமல் தடுப்பு

2 mins read
682229da-c1b9-4335-b07c-7454c5638c99
கோப்புப்படம்: தொடர்பு தகவல் அமைச்சு -

இவ்­வாண்­டில் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள நான்கு வர­வு­செ­ல­வுத் திட்­டங்­க­ளால் சிங்­கப்­பூ­ரின் பொருளியல் இவ்­வாண்­டில் மேலும் 5.6 விழுக்­கா­டும் அடுத்த ஆண்­டில் 4.8 விழுக்­காடும் சுருங்­கு­வது தடுக்­கப்­படும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நாடாளு­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

பொரு­ளி­யல் ஆத­ரவு நட­வ­டிக்­கை­க­ளால் நடப்பாண்­டில் உள்­ளூர்­வா­சி­க­ளின் வேலை­யின்மை விகி­தம் மேலும் 1.7 விழுக்­காட்­டுப் புள்­ளி­கள் உயர்­வது தடுக்­கப்­பட்­டு உள்­ள­தாக திரு ஹெங் கூறினார்.

"ஒட்­டு­மொத்­தத்­தில் இன்­னும் வேலை­யி­ழப்­பு­கள் இருக்­கும் என்­றா­லும், பொரு­ளி­யல் ஆத­ரவு நட­வடிக்­கை­க­ளால் ஈராண்­டு­களில் 155,000 வேலை­கள் காக்­கப்­பட்­டுள்­ளன. வேலை ஆத­ர­வுத் திட்­டம் மூல­மாக மட்­டும் அதில் பாதிக்­கும் மேற்­பட்ட வேலை­க­ளைக் காத்­துள்­ளோம்," என்று நிதி­ய­மைச்­ச­ரும் பொரு­ளி­யல் கொள்­கை­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான திரு ஹெங் சொன்னார்.

கொவிட்-19 நெருக்­க­டி­யைக் கடப்­பது மட்­டு­மின்றி, அடுத்­த­கட்ட வளர்ச்­சிக்­கான வழியை அமைப்­பதை­யும் சிங்­கப்­பூர் இலக்­கா­கக் கொண்­டுள்­ளது என்­றார் அவர்.

கொரோனா தொற்­றுக்கு எதி­ரான போரில் சிங்­கப்­பூ­ரின் நிலை, நாட்­டின் பொரு­ளி­யல் சூழல், இந்த இக்­கட்­டிலிருந்து நாடு வலு­வாக வெளிப்­ப­டு­வ­தற்­கான உத்­தி­கள் ஆகி­யவை தொடர்­பில் திரு ஹெங் நாடா­ளு­மன்­றத்­தில் அமைச்­சர்­நிலை உரை­யாற்­றி­னார்.

நான்கு வர­வு­செ­ல­வுத் திட்­டங்­கள் மூலம் ஏறத்­தாழ $100 பில்­லி­யன் மதிப்­பி­லான கொவிட்-19 ஆத­ர­வுத் திட்­டங்­கள் அறி­விக்­கப்­பட்­டன. அத்­து­டன், வேலை­க­ளைக் காக்­க­வும் புதிய வேலை­களை உரு­வாக்­க­வும் புதிய வளர்ச்சி வாய்ப்­பு­க­ளைக் கைப்­பற்­ற­வும் மேலும் $8 பில்­லி­யன் மதிப்­பி­லான ஆத­ர­வுத் திட்­டங்­களை துணைப் பிர­த­மர் திரு ஹெங் கடந்த ஆகஸ்ட் மாதம் அறி­வித்­தி­ருந்­தார்.

கொரோனா ஆத­ர­வுத் திட்­டங்­க­ளுக்­காக, அதி­பர் ஹலிமா யாக்­கோ­பி­டம் இரு­முறை ஒப்­பு­தல் பெறப்­பட்டு, கடந்­த­கால இருப்­பு­நிதி­யில் இருந்து $52 பில்­லி­யன் பெறப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில், அண்­மைய ஆத­ர­வுத் திட்­டங்­களுக்­கா­கக் கையி­ருப்­பில் இருந்து நிதி கோரு­வ­தற்­குத் திட்­ட­மில்லை என்று திரு ஹெங் தெரி­வித்­து உள்­ளார்.

தமது உரை­யின்­போது, புதுப்­பொ­லிவு கண்ட சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் உத்­தி­யின் மூன்று அம்­சங்­க­ளைப் பற்­றி­யும் அவர் குறிப்­பிட்­டார்.

முத­லா­வ­தாக, தொழில்­நுட்ப, புத்­தாக்க, தொழில்­மு­னைப்­பில் உல­கத்­தை­யும் ஆசி­யா­வை­யும் இணைக்­கும் மைய­மாக சிங்­கப்­பூரை உரு­வாக்­கு­வ­தில் கவ­னம் செலுத்­தப்­படும்.

அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய வளர்ச்­சிக்­கான முயற்­சி­களை மீண்­டும் இரட்­டிப்­பாக்­கு­வ­தும் பொரு­ளி­யல் மீள்­தி­ற­னில், நீடித்த நிலைப்புத்­தி­ற­னில் முத­லீடு செய்­வதும் அடுத்த இரு அம்­சங்­கள்.

இப்­போது எடுக்­கப்­பட்டு வரும் நட­வ­டிக்­கை­கள், அடுத்த ஐந்து முதல் பத்­தாண்­டு­க­ளுக்­குத் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்று திரு ஹெங் குறிப்­பிட்­டார்.