வீட்டு உரிமையாளர் மாற்றம் தொடர்பில் வேண்டுமென்றே தவறான தகவல்களைத் தந்தால் வீட்டைக் கையகப்படுத்த வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திற்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இப்போது வீடு வாங்கும்போது வீட்டுரிமையாளர்கள் அவ்வாறு வேண்டுமென்றே தவறான தகவல்களைத் தந்தால்தான் கட்டாய கையகப் படுத்தல் அனுமதிக்கப்படுகிறது.
வீடமைப்பு, வளர்ச்சிச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள இன்னொரு திருத்தம், அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் வீவக வீடுகளுக்கான சொத்துக் கடன்களை சிங்கப்பூர் நாணய ஆணையத்திடம் இருந்து பணமாக மாற்றத்தக்க சொத்துகளாக அடைமானம் வைக்க அனுமதிக்கிறது.