பிரபல அறைகலன் விற்பனையாளர் இக்கியா, ஜூரோங் வட்டாரத்தில் உள்ள ஜெம் பேரங்காடியில் புதிய கிளை ஒன்றைத் திறக்கிறது.
இது சிங்கப்பூரில் இக்கியாவின் மூன்றாவது கிளையாகும்.
கடந்த நிதி ஆண்டில் இக்கியாவின் வருமானம் குறைந்த
போதிலும் இன்னொரு கிளையை அது திறப்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கிளை ஏறத்தாழ 6,500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும். ஜூரோங் கிளை அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கிளைக்காக 200 பேரை வேலையில் அமர்த்த இக்கியா திட்டமிட்டுள்ளது.
கொரோனா நெருக்கடிநிலையால் முடக்கநிலை ஏற்பட்ட
போதிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் மெக்சிகோவிலும் உள்ள இக்கியா கிளைகள் அதன் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவில்லை.
தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள அதன் ஒன்பது கிளை
களின் வருமானம் 7.4 விழுக்காடு குறைந்தபோதிலும் கூடுதல் ஊழியர்களை வேலையில் அமர்த்த அது திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இக்கியாவின் வருமானம் $304ஆகப் பதிவானது. இது கடந்த ஆண்டைவிட 10 விழுக்காடு குறைவு. கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரில் உள்ள அதன் கிளைகள் 73 நாட்களுக்கு மூடப்பட்டிருந்தன.