ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு (எஐசி) நிர்வகிக்கும் நிதியுதவித் திட்டங்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் இனி அதன் புதிய இணையத்தளத்தின் மூலம் சமர்ப்பிக்கப்படலாம்.
“நிதியுதவித் திட்டங்கள் வழி பலனடைந்து வருவோரும் அவற்றுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முறை இனி, மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளது,” என்று அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இணையத்தளம் தொடங்கப்படுவதற்கு முன் விண்ணப்பப் படிவங்கள் நேரடியாகவோ அஞ்சல் வழியாகவோ அமைப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டு வந்தன. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறித்தும் வழங்கப்படும் தொகை குறித்தும் விண்ணப்பதாரர்கள் தகவல் அறிய அஞ்சல், தொலைபேசி அழைப்பு அல்லது மின்னஞ்சல் வழி அமைப்புடன் தொடர்புகொள்ள வேண்டியிருந்தது.
இனி ‘சிங்பாஸ்’ மூலம் இணையத்தளத்தைப் பயன்படுத்தி ஒருவர் நிதியுதவித் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதுடன் அது எந்த நிலையில் உள்ளது என்பதைக் கண்காணிக்கவும் முடியும்.
‘கேர்ஷீல்ட் லைஃப்’, ‘எல்டர் ஃபண்ட்’ போன்றவை எஐசி நிர்வகித்து வரும் நிதியுதவித் திட்டங்களில் அடங்கும்.