உள்ளூர்வாசிகளின் வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் மாதமும் அதிகரிப்பு

உள்ளூர்வாசிகளின் வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் மாதமும் அதிகரிப்பு

3 mins read
7e4de01d-d8e1-4027-ac17-39ddefaa06f4
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரர்கள், நிரந்தரவாசி களின் வேலை­யின்மை விகி­தம் ஆகஸ்ட் மாதம் 0.4 விழுக்­காடு உயர்ந்து 4.5 விழுக்­காட்­டைத் தொட்­டதாக மனி­த­வள அமைச்சு கூறியது. ஜூலை மாதத்­தைக் காட்­டி­லும் இது சற்று உயர்வு. அந்த மாதத்­தில் உள்­ளூர்­வா­சி­கள் இடை­யி­லான வேலை­யின்மை 0.3 விழுக்­காடு அதி­க­ரித்து மொத்த விகி­தம் 4.1 விழுக்­காடு ஆனது.

இருந்­த­போ­தி­லும் மாதாந்­திர வேலை­யின்மை விகி­தம் ஏற்­கெ­னவே நில­விய நெருக்­கடி காலங்­க­ளைக் காட்­டி­லும் குறை­வா­கவே நீடிப்­ப­தாக அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது. 2003ஆம் ஆண் டில் சார்ஸ் நோய் பர­வி­ய­போது அந்த ஆண்­டின் செப்­டம்­பர் மாதத்­தில் வேலை­யின்மை விகி­தம் வேக­மாக உயர்ந்து 6.2 விழுக்­காட்­டைத் தொட்­டது. அதன் பின்­னர் உலக நிதி நெருக்­க­டி­யின்­போது 2009 செப்­டம்­ப­ரில் 4.9 விழுக்­காட்டு வேலை­யின்மை நில­வி­ய­தாக அமைச்சு விளக்கி உள்­ளது.

தற்­போ­தைய வேலை­யின்மை நில­வ­ரம் குறித்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்த மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ, "வரு­கிற மாதங்­க­ளி­லும் இதே நிலைமை நீடிக்­குமா அல்­லது இன்­னும் வேக­மாக உய­ருமா என்­பதை இப்­போதே கணித்­து­விட முடி­யாது. இருந்­த­போ­தி­லும் நிலை­மையை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­கி­றோம். அடுத்­த­கட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் தயா­ரா­னதும் அவற்றை பொது­மக்­க­ளி­டம் தெரி­விப்­போம்," என்­றார்.

சுமார் $100 பில்­லி­யன் பெறு­மான நான்கு வரவு செல­வுத் திட்­டங்­கள் அடுத்­த­டுத்து தாக்­கல் செய்­யப்­பட்­ட­தன் விளை­வாக சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் இவ்­வாண்டு 5.6 விழுக்­கா­டும் அடுத்த ஆண்டு 4.8 விழுக்­கா­டும் சுருங்­கும் ஆபத்து தடுக்­கப்­பட்டு இருப்­ப­தாக சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் தெரி­வித்த மதிப்­பீட்டை அமைச்சு சுட்­டி­யது. அத்­து­டன், "அறி­மு­கம் செய்­யப்­பட்ட பொரு­ளி­யல் ஆத­ரவு நட­வ­டிக்­கை­கள் மூலம் இவ்­வாண்­டின் வேலை­யின்மை விகி­தம் 1.7 விழுக்­காடு உயர்­வ­தும் தடுக்­கப்­பட்டு உள்­ளது. இது அடுத்த ஈராண்­டு­களில் 155,000 வேலை­கள் பறி­போய்­வி­டா­மல் காப்­ப­தற்­குச் சமம்," என்­றது அமைச்சு.

வேலை­யின்மை நில­வ­ரம் தொடர்­பாக ஒவ்­வொரு மாத­மும் தக­வல் அளிக்­கும் புதிய வழக்­கத்தை அமைச்சு கடந்த மாதம் தொடங்­கி­யது. இவ்­வாண்டு தொடங்­கி­ய­தில் இருந்து மார்ச் மாதம் வரை­யி­லான மூன்று மாத காலத்­தில் 3,220 பேர் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­னர். இந்த எண்­ணிக்கை அதற்கு அடுத்த மூன்று மாதங்­களில் ஏறத்­தாழ இரு­ம­டங்கு அதி­க­ரித்து 8,130 ஆனது.

உள்­ளூர் ஊழி­யர்­களை வேலை­யில் வைத்­தி­ருக்க நிறு­வ­னங்­க­ளுக்கு உத­விக்­க­ரம் நீட்­டும் பொருட்டு வேலை ஆத­ர­வுத் திட்­டத்தை அறி­மு­கம் செய்த அர­சாங்­கம், தொடர்ச்­சி­யாக வேலை வளர்ச்சி ஊக்­கத்­தொ­கைத் திட்­டத்­தை­யும் கொண்டு வந்­த­தாக திரு­வாட்டி டியோ நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

40 வய­துக்­குட்­பட்ட உள்­ளூர்­வா­சியை புதி­தாக வேலை­யில் நிய­மிக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு அவ­ரது மொத்த மாதாந்­திர ஊதி­யத்­தின் முதல் $5,000யில் 25 விழுக்­காட்டை அர­சாங்­கம் மானி­ய­மாக அளிக்­கும். 40 வய­துக்கு மேற்­பட்­டோரை வேலை­யில் அமர்த்­தும்­போது இந்த உதவி இரட்­டிப்­பாக, அதா­வது 50 விழுக்­காட்டு மானி­யம் வழங்­கப்­படும். இதற்கு தகுதி பெற இவ்­வாண்­டின் செப்­டம்­பர் தொடங்கி அடுத்த ஆண்டு பிப்­ர­வரி வரை­யில் உள்­ளூர் ஊழி­ய­ர­ணி­யில் அதி­க­மா­னோரை நிறு­வ­னங்­கள் சேர்க்க வேண்­டும். அத்­து­டன் குறைந்­த­பட்­சம் $1,400 மாதச் சம்­ப­ளம் ஈட்­டு­வோ­ரின் எண்­ணிக்­கையை அவை அதி­க­ரிக்க வேண்­டும். இந்த வேலை வளர்ச்சி ஊக்­கத்­தொ­கைத் திட்­டம் நல்ல பல­னைத் தரக்­கூ­டி­யது என்­றார் அமைச்­சர் டியோ.

"நிறு­வ­னங்­க­ளி­டம் இனி­யும் தயக்­கம் இருக்­கக்­கூ­டாது என்­பதை நிலை­நாட்ட விரும்­பு­கி­றோம். அதே­நே­ரம் வேலைக்கு ஆள் எடுக்­கத் தொடங்­கிய நிறு­வ­னங்­கள் அதி­க­மா­னோ­ருக்கு வேலை வழங்க அவர்­க­ளுக்கு இத்­திட்­டத்­தின் மூலம் கூடு­தல் ஆத­ரவு வழங்­கப்­பட்டு உள்­ளது," என்­றார் அவர்.