இரண்டு மாதக் கிருமி முறியடிப்புத் திட்டம் முடிவடைந்து முதல் கட்டத் தளர்வுகள் தொடங்கியபோது உல்லாசக் கூடங்களுக்குத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும், ஜாலான் புசாரில் உள்ள ஒரு கட்டடத்தின் மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள தன் ‘டிரிங்க்இட்அப்’ உல்லாசக் கூடத்தை லியாவ் கெங் சுன், 39, சட்டவிரோதமாக இயக்கியதாகவும் இரண்டு வாடிக்கையாளர்களை உபசரிக்க இரு வியட்னாமிய பெண்களுக்கு ஏற்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறியதன் தொடர்பிலான குற்றச்சாட்டை நேற்று லியாவ் ஒப்புக்கொண்டார்.
முதல் கட்டத் தளர்வுகளின் போது இயங்கமுடியாது என்று அறிந்திருந்தும் லியாவ் ஜூன் 2 முதல் தன் வியாபாரத்தை முன்பதிவு செய்பவர்களுக்காக திறந்ததாகக் கூறப்பட்டது. ஜூன் 5ஆம் தேதியன்று உல்லாசக் கூடத்திற்கு வந்த இரு ஆடவர்களைக் கட்டடத்தின் பின்வாசல் வழியாக உள்ளே அனுமதித்தார் லியாவ்.
பின் கட்டடத்தில் அமலாக்கச் சோதனையை போலிசார் மேற்கொண்டபோது அனைவரும் சிக்கினர்.