அனைத்துலக கொரோனா சிகிச்சை சோதனையில் சிங்கப்பூர் நோயாளிகள்

2 mins read
e2081ad1-fa2a-4afd-879e-02578d1875f1
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 நோயெ­திர்ப்­புப் பொருள் (ஆன்­டி­பாடி) சிகிச்­சை­யைச் சோதித்­துப் பார்க்­கும் அனைத்­துலக முன்­னோட்­டச் சோத­னை­யில் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த கொரோனா நோயா­ளி­கள் பங்­கேற்­க­வுள்­ள­னர்.

அந்த 'மோனோ­கு­ளோ­னல்' நோயெ­திர்ப்­புப் பொருள் சிகிச்சை சோதனை முயற்­சிக்கு முதல் நோயா­ளி­க­ளைப் பதி­வு­செய்­யத் தயா­ராக இருப்­ப­தாக சிங்­கப்­பூர் தொற்­று­நோய்த் தடுப்பு நிலை­யம் ஓர் அறிக்கை வாயி­லாக நேற்று தெரி­வித்­தது. எத்­தனை பேர் அந்த முன்­னோட்­டச் சோத­னை­யில் பங்­கேற்­பர், எப்­போது அது தொடங்­கும் என்­பன போன்ற விவ­ரங்­கள் அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

தூய்­மைப்­ப­டுத்­தப்­பட்ட, அதிக திறன்கொண்ட 'மோனோ­கு­ளோ­னல்' நோயெ­திர்ப்­புப் பொருள், கொரோனா கிரு­மி­யின் குறிப்பிட்ட புர­தத்­தைக் குறி­வைக்­கிறது.

"கடு­மை­யான கொரோனா தொற்­றால் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­வர்­க­ளி­டத்­தில் ரெம்­டெ­சி­விர், டெக்­சா­மெத்­த­சோன் ஆகிய மருந்­து­க­ளின் செயல்­தி­றன் முன்­னோட்­டச் சோத­னை­களில் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது," என்று தொற்­று­நோய்த் தடுப்பு நிலை­யத்­தின் தொற்­று­நோய் ஆய்வு, பயிற்சி அலு­வ­ல­க இயக்­கு­ந­ரும் மூத்த ஆலோ­ச­க­ரு­மான இணைப் பேரா­சி­ரி­யர் டேவிட் லை கூறி­னார்.

"இன்­னும் செயல்­தி­றன்­மிக்க சிகிச்சை தெரி­வு­கள் நமக்­குத் தேவை. அடுத்த கட்ட கொரோனா சிகிச்சை முன்­னோட்­டச் சோத­னை­களில் 'மோனோ­கு­ளோ­னல்' நோயெ­திர்ப்­புப் பொருள்­கள் நம்­பிக்கை அளிப்­ப­தாக உள்­ளன," என்­றார் அவர்.

முன்­னோட்­டச் சோத­னை­களில் பங்­கேற்­போ­ருக்கு அந்­த நோ­ய் எதிர்ப்­புப் பொருள் அல்­லது 'பிளா­சிபோ'வுடன் ரெம்­டெ­சி­விர் மருந்­தும் தரப்­படும். பொருத்­த­மா­னது என மருத்­து­வர் நினைத்­தால், நோயா­ளி­க­ளுக்கு டெக்­சா­மெத்­த­சோன் மருந்­தும் தரப்­படும் என்று பேரா­சி­ரி­யர் டேவிட் சொன்­னார்.

நிமோ­னியா மற்­றும் உயிர்­வாயு தேவைப்­படும் நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்சை அளிப்­ப­தில் கவ­னம் செலுத்­தப்­படும் என்று தொற்­று­நோய்த் தடுப்பு நிலை­யம் தெரி­வித்­துள்­ளது.

'இலி லில்லி அண்ட் கோ' எனும் அமெ­ரிக்க மருந்து நிறு­வ­னம் இந்த 'மோனோ­கு­ளோ­னல்' நோயெ­திர்ப்­புப் பொருளை உரு­வாக்­கி­யுள்­ளது.

அம்­ம­ருந்து பாது­காப்­பா­னது என்­ப­தை­யும் நோயா­ளி­க­ளின் அறி­கு­றி­களை மேம்­ப­டுத்தி, கிரு­மி­களின் எண்­ணிக்­கை­யைக் குறைக்­கிறது என்­ப­தை­யும் முதற்­கட்­டச் சோத­னை­கள் காட்­டு­கின்­றன.