சிங்கப்பூர், தென்கொரியாவுடன் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையம் (ஏர் டிராவல் பபுல்) அமைத்துக்கொள்ள வேண்டும் என அதிகமான சிங்கப்பூரர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்தாய்வில், தென்கொரியாவை 40.7 விழுக்காட்டினர் தேர்வு செய்தனர். ஜப்பான் (17.7%), தாய்லாந்து (16.9%) ஆகிய நா:டுகள் அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்தன.
மலேசியா (11.6%), நியூசிலாந்து (8.6%), சீனா (4.5%) ஆகியவை பட்டியலில் இடம்பிடித்துள்ள மற்ற நாடுகள்.
கட்டுப்பாடற்ற பொதுப் பயணங்களை மேற்கொள்ள ஏதுவாக, பாதுகாப்பான நாடுகளுடன் அல்லது வட்டாரங்களுடன் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையங்களை அமைப்பது தொடர்பில் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை நடத்தும் என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் ஃபேஸ்புக் வழியாக இந்தக் கருத்தாய்வை நேற்று நடத்தியது. ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஆய்வில் பங்கேற்று தங்களது கருத்துகளைப் பதிவுசெய்தனர்.