கடந்த ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, சொத்துக் கடனைக் காலந்தாழ்த்தித் திருப்பிச் செலுத்த அனுமதிக்கக் கோரி வங்கிகளுக்கு 38,900 விண்ணப்பங்கள் வந்தன என்றும் அவற்றில் கிட்டத்தட்ட 90% விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்றும் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து இருக்கிறார்.
அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களில் ஏறக்குறைய 26,000 விண்ணப்பங்கள் வீட்டுக்கடன் தொடர்பானவை.
இதன் காரணமாக $20 பில்லியன் மதிப்பிலான கடன் தவணைத்தொகை காலந்தாழ்த்திச் செலுத்தப்படும் என்றார் திரு தர்மன்.
புக்கிட் பாத்தோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளைக்கு எழுத்துவழி அளித்த பதிலில் திரு தர்மன் இந்தப் புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுள், சுகாதாரக் காப்புறுதியைப் பொறுத்தமட்டில், சந்தா செலுத்துவதைத் தள்ளிவைக்கக் கோரி 32,700 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு வந்தன என்றும் அவற்றில் 90% விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்றும் மூத்த அமைச்சர் தர்மன் தெரிவித்தார்.
காலந்தாழ்த்திச் செலுத்த அனுமதிக்கப்பட்ட காப்புறுதிச் சந்தாத் தொகையின் மொத்த மதிப்பு $66 மில்லியன் எனக் கூறப்பட்டது.