சிங்கப்பூர் கடற்கரைகளுக்குச் செல்வதற்கு முன் அங்கு நீரின் தரத்தைப் பற்றி தெரிந்துகொள்ள புதிய வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
இங்குள்ள ஒன்பது கடற்கரைகளில் நீரின் தரம் குறித்த மதிப்பீடுகளை தேசிய சுற்றுப்புற வாரியம் வாரந்தோறும் வழங்குகிறது. அதோடு சேர்த்து, நீரில் உள்ள ஒருவகை ‘பாக்டீரியா’ அளவின் அடிப்படையில் ஆலோசனைக் குறிப்பையும் வாரியம் வழங்குகிறது. செந்தோசாவின் சிலோசோ கடற்கரை, பலாவான் கடற்கரை, தஞ்சோங் கடற்கரை, சிலேத்தார் தீவு கடற்கரை, செம்பவாங் பூங்கா கடற்கரை, சாங்கி கடற்கரை, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா கடற்கரை, பாசிர் ரிஸ் கடற்கரை, பொங்கோல் கடற்கரை ஆகியன அந்த ஒன்பது கடற்கரைகள்.