சிங்கப்பூரில் இன்று (அக்டோபர் 8) நண்பகல் நிலவரப்படி புதிதாக 9 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57,849 ஆகியுள்ளது.
இன்று உள்ளூர் சமூகத்தில் புதிதாக யாருக்கும் கிருமித்தொற்று இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஐவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
சிங்கப்பூரில் நேற்று (அக்டோபர் 7) அறிவிக்கப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 6, வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்பிலானது.
விடுதிகளில் வசிக்கும் நான்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கும் நேற்று கிருமித்தொற்று அறிவிக்கப்பட்டது.
இதுவரை சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவில் 35.8 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1 மில்லியனுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.