மின்சார சைக்கிள், மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிபோன்ற தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பொது வழிகளில் பயன்படுத்தும் விநியோக ஊழியர்களை வேலையில் அமர்த்தும் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு டிசம்பர் முதல் மூன்றாம் தரப்பு காப்புறுதிப் பாதுகாப்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஊழியர்கள் வேலையில் காயம் அடைந்தாலோ, மரணமடைந்தாலோ அந்தக் காப்புறுதி பாதுகாப்பு துணையாக இருக்கும்.
மோட்டார் பொருத்தப்பட்ட தனிநபர் நடமாட்டச் சாதனங்களை வாடகைக்குவிட உரிமை பெற்றிருக்கும் நிறுவனங்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்து இருக்கிறது.