கொவிட்-19 சூழல் குறித்து அமைச்சர் சான் சுன் சிங்: ஒரு தலைமுறைக்கான நெருக்கடியும் வாய்ப்பும்

கொவிட்-19 சூழல் குறித்து அமைச்சர் சான் சுன் சிங்: ஒரு தலைமுறைக்கான நெருக்கடியும் வாய்ப்பும்

2 mins read
9a7db35d-0686-43e4-be20-9b96ce437a8b
படம்: சிஎம்ஜி -

ஒரு தலை­மு­றைக்­கான நெருக்­கடி­யாக வர்­ணிக்­கப்­படும் கொவிட்-19 சூழல் ஒரு தலை­முறைக்­கான வாய்ப்­பா­க­வும் அமை­ய­லாம் என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா கிரு­மித்­தொற்­றுச் சூழ­லால் ஏற்­படும் இடை­யூ­று­களை சிங்­கப்­பூர் வாய்ப்­பு­க­ளாக மாற்று­வதாக அவர் குறிப்­பிட்­டார்.

தற்­போ­தைய சூழ­லில் உல­கம் ஏரா­ள­மான சவால்­க­ளைச் சந்­தித்து வந்­தா­லும் சிங்­கப்­பூர் தொடர்ந்து பாது­காப்­பான இட­மாக இருப்­பதை அவர் சுட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ரின் நிலைத்­தன்­மை­யும் தொலை­நோக்­குப் பார்­வை­யுமே அதற்­குக் கார­ணம்.

இத­னால் முத­லீட்­டா­ளர்­க­ளை­யும் வர்த்­த­கங்­க­ளை­யும் சிங்­கப்­பூர் ஈர்க்க முடி­வ­தாக அவர் சொன்­னார்.

மக்­கள் கழ­கத்­தின் சமூ­கக் கருத்­த­ரங்கு ஒன்­றில் நேற்று கலந்து­கொண்டு பேசிய திரு சான், "நீண்­ட­கா­லத்­திற்­குத் திட்­ட­மி­டு­வது, நீண்­ட­கால கண்­ணோட்­டத்­து­டன் செயல்­ப­டு­வது போன்­ற­வற்றை உல­கத்­தி­டம் நாம் காட்­டி­னால், உலக நாடு­க­ளுக்கு மத்­தி­யில் சிவப்­புப் புள்­ளி­யாக நாம் பிர­கா­சிப்­போம்.

"அவ்­வாறு நாம் திகழ்ந்­தால் சிங்­கப்­பூ­ரில் முத­லீடு செய்ய கூடு­த­லா­னோர் இங்கு வரு­வார்­கள். இதன் மூலம் நம் மக்­க­ளுக்கு சிறந்த வேலை­கள் உரு­வாக்­கப்­படும். எனவே, கொவிட்-19 கொள்­ளை­நோயை எதிர்த்து நாம் போராடி வரும் அதே­வே­ளை­யில், உல­கம் முழு­வ­தும் ஏற்­படும் மாற்­றங்­களை நாம் அணுக்­க­மா­கக் கவ­னிக்க வேண்­டும்," என்று கூறி­னார்.

தீவு முழு­வ­தும் 150 இடங்­களில் மக்­கள் கழ­கத்­தைச் சேர்ந்த 1,500 ஊழி­யர்­கள், தொண்­டூ­ழி­யர்­கள் நேற்று இந்­தக் கருத்­த­ரங்­கில் பங்­கேற்­ற­னர். சிலர் 'ஸூம்' காணொ­ளிக் காட்சி வாயி­லாக இதில் கலந்­து­கொண்­ட­னர்.

கொவிட்-19 சூழ­லுக்கு மக்­கள் கழ­கம் தன்­னை மாற்றி அமைத்துக்­கொண்டு வரும் அதே­வே­ளை­யில், பாது­காப்பு நடை­மு­றை­க­ளின்­கீழ் சமூக நிர்­மா­ணப் பணி தொடர வேண்­டும் என்று மக்­கள் கழத்­தின் துணைத் தலை­வ­ரு­மான திரு சான் வலி­யு­றுத்­தி­னார்.

எனி­னும், மக்­கள் கழ­கம் அதன் பணி­களை மேற்­கொள்­வ­தில் செயல்­பாட்டு முறையை மாற்­றி­ய­மைக்க இது ஒரு வாய்ப்பு என்று சொன்ன அவர், சில சமூக நிலை­யங்­கள் நட­வ­டிக்­கை­களை இணை­யம்­வழி நடத்­து­வ­தால் அவற்­றில் பங்­கேற்­போர் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தைச் சுட்­டி­னார்.

மக்­கள் கழக ஊழி­யர்­கள், தொண்­டூ­ழி­யர்­க­ளின் பணி­க­ளை­யும் திரு சான் தமது உரை­யில் குறிப்­பிட்­டுப் பேசி­னார்.

எடுத்­துக்­காட்­டாக, தனிமை உத்­த­ரவு மற்­றும் வீட்­டில் இருக்­கும் உத்­த­ர­வில் வைக்­கப்­பட்­டி­ருந்த 5,000க்கும் அதி­க­மா­னோ­ருக்கு உணவு உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய பொருட்­களை அவர்­கள் விநி­யோ­கித்­த­னர்.

இதற்கு முன்­ன­தாக நடை­பெற்ற மூன்று முகக்­க­வச விநி­யோக நட­வ­டிக்­கை­களில் 40,000க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­கள், தொண்­டூ­ழி­யர்­கள் ஈடு­பட்­ட­தாக மக்­கள் கழ­கம் நேற்று தெரி­வித்­தது.

தற்­போது 'டிரேஸ்­டு­கெ­தர்' தட­ம­றி­யும் கரு­வி­களை மக்­கள் கழ­கம் விநி­யோ­கம் செய்து வரு­கிறது. ஜாலான் புசார், தஞ்­சோங் பகார் பகு­தி­களில் இது­நாள் வரை ஏறக்­கு­றைய 1,900 ஊழி­யர்­கள், தொண்­டூ­ழி­யர்­கள் 96,000 கரு­வி­களை விநி­யோ­கித்து உள்­ள­னர்.