கொவிட்-19 தொற்று காரணமாக மன நலனைப் பற்றிய புரிந்துணர்வையும் மனநலன் தொடர்பான வளங்களையும் மேம்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைத்து இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வாய்ப்புகள் எதிர் காலத்தில் மனநலன் மேம்பட பெரிதும் உதவும் என்று மன நலக் கழகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நெருக்கடி காரணமாக பல்வேறு மனநல அமைப்பு களும் புதுப்புது திட்டங்களைத் தொடங்கி உள்ளன.
இதனிடையே, சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று சூழலில் முன்பைவிட அதிகமானவர்கள் மனநலப் பிரச்சினைகள் தொடர்பில் உதவி நாடினர்.
அவர்களில் பல வயதினரும் அடங்குவர்.
அரசு, தனியார் சமூகத் துறைகளைச் சேர்ந்த 12 பேருக்கும் மேற்பட்ட மனநல மருந்தகங்களையும் சேவை வழங்குவோரையும் தொடர்புகொண்டபோது இந்த நிலவரம் தெரியவந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.