மனநலப் பிரச்சினைகள்: அதிகம் பேர் உதவி நாடினர்

மனநலப் பிரச்சினைகள்: அதிகம் பேர் உதவி நாடினர்

1 mins read
19b44262-1a5d-4d3c-9a76-ba87fcf80f24
-

கொவிட்-19 தொற்று கார­ண­மாக மன நல­னைப் பற்­றிய புரிந்­துணர்வை­யும் மனநலன் தொடர்­பான வளங்­க­ளை­யும் மேம்­ப­டுத்த நல்ல வாய்ப்­பு­கள் கிடைத்து இருப்­ப­தாக வல்­லுநர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அந்த வாய்ப்­பு­கள் எதிர் காலத்­தில் மனநலன் மேம்­பட பெரி­தும் உத­வும் என்று மன நலக் கழ­கத்­தைச் சேர்ந்த வல்­லு­நர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்த நெருக்கடி காரணமாக பல்வேறு மனநல அமைப்பு களும் புதுப்புது திட்டங்களைத் தொடங்கி உள்ளன.

இதனிடையே, சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்று சூழ­லில் முன்­பை­விட அதி­க­மா­ன­வர்­கள் மனநலப் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் உதவி நாடினர்.

அவர்களில் பல வய­தினரும் அடங்குவர்.

அரசு, தனி­யார் சமூ­கத் துறை­க­ளைச் சேர்ந்த 12 பேருக்­கும் மேற்­பட்ட மனநல மருந்­த­கங்­களை­யும் சேவை வழங்­கு­வோரை­யும் தொடர்புகொண்­ட­போது இந்த நில­வ­ரம் தெரி­ய­வந்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்டு உள்­ளது.