ஆசிய பசிபிக்கில் கொவிட்-19 காரணமாக நெருக்கடிகள், மன உளைச்சல் அதிகமாகின்றன. ஆனாலும் 18 முதல் 24 வரை வயதுள்ள பிரிவினரில் பலரும் மனநலப் பிரச்சினைகளைப் பற்றி வெளிப்படுத்த இன்னமும் படாதபாடுபடுகிறார்கள்.
சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங்கில் வசிக்கும் இந்த வயது தலைமுறையைச் சேர்ந்த 1,226 பேரை உள்ளடக்கி ஆய்வு நடத்தப்பட்டது.
கொவிட்-19 காரணமாக தங்களுக்கு உளைச்சல் அதிகரித்துவிட்டதாக அவர்களில் 73% கூறினார்கள். மனநலன் மோசமாகிவிட்டதாக 57% தெரிவித்தனர்.
மன உளைச்சல் மாதத்தில் குறைந்தது ஒரு தடவையாவது மிக மோசமாகிவிடுகிறது என்று சுமார் 80% கூறினர். வாராவாரம் இந்த நிலை ஏற்படுவதாக 28% தெரிவித்தனர். அன்றாடம் இதே பிரச்சினை என்று கூறியவர்கள் 11%.
ஆனால் 41% மட்டுமே தங்கள் மனநலப் பிரச்சினை பற்றி விவாதிக்க முன்வந்தனர் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.